திங்கள், 31 மார்ச், 2014

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்


அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது



தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம்


சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

வெள்ளி, 14 மார்ச், 2014

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும். முட்டையில் தைராய்டு ஹோர்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது.
பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது.
முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது.
இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன.
தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும், வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையை தெளிவாக்கும்.
குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.
சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே இதயநோய் அபாயமும் இல்லை.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால் அதை அளவுடன் சாப்பிட்டால் இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம்.
1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு.
இதைத் தவிர 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர். அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.
அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை. 80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.
இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும். நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.

வெந்தய கீரை

கீரைகளில் மிகவும் சிறப்பான கீரை வெந்தய கீரையாகும். இந்த கீரை மிகவும் குளிர்ச்சி தன்மையுடைய கீரையாகும். வெந்தய கீரை வயிறு சம்ந்தமான நோய்களுக்கு மிகவும் சிறந்தது. உதாரணமாக வயிற்றுபொருமல் மற்றும் வயிறு மந்தம் போன்ற நோய்களுக்கு சிறந்தது.

வெந்தயத்தை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் இதுவே வெந்தய கீரையின் விதையாகும். இந்த கீரை கிடைக்காத பட்சத்தில் இந்த விதையை பயன்படுத்தி உங்கள் வீட்டு தொட்டிகளிலேயே வெந்தய கீரையை வளர்க்கலாம். இது வளர்ந்த ஒரு வாரத்தில் பயன்படுத்த முடியும். இதை பராமரித்து வளர்க்க பெரிதாக ஒன்றும் தேவையில்லை.

வெந்தய கீரை சிறந்த மலம் இளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. இந்த கீரையில நார் சத்து, இரும்புச் சத்து,கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. வெந்தய கீரை தோல் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது. இது இரத்தத்தை பெருக்கி உடலை வலிமையாக்கும்.

உலர்ந்த திராட்சை பத்து , சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இதனுடன் வெந்தய கீரையை சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் குணமாகாத இரும்பலும் குணமாகும்.
இரத்தத்தை தூய்மையாக்க சிறிது வாழைப்பூ மற்றும் மிளகு சேர்த்து காஷ யமாக சாப்பிட்டால் இரத்ததம் தூய்மையடையும்.
வாயு கோளாறுக்கு சிறிது ஓமம் எடுத்து வெந்தய கீரையுடன் சாப்பிட்டால் வாயு கோளாறு நிவர்த்தியாகும்.
வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

100 கிராம் வெந்தய கீரையில் உள்ள சத்துக்கள்
கலோரி திறன் 49
வைட்டமின்சி 52 மி.கி.
இரும்பு 16 மி.கி.
காலசியம் 400 மி.கி.
பாஸ்பரஸ் 50 மி.கி.
தாதுப்பொருள் 1.5%
நார்ச்சத்து 1.1%
மாவுச்த்து 6.0%
நீர்சத்து 86%
புரதம் 4.5%
கொழுப்பு 0.9%
                                 

ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் 2008-ம் ஆண்டு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்துள்ளது. அம்னியாடிக் ப்ளூயிட் டிரைவ்ட் ஸ்டெம் செல்களை சுருக்கமாக .எஃப்.எஸ் (AFS) என்று குறிப்பிடுகின்றனர். இந்த அரியவகை ஸ்டெம் செல் மனித உடலில் உள்ள 220 விசேஷமான செல் மாதிரிகளில் பலவற்றை உருவாக்க உதவும் ஆற்றல் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 


இந்த .எஃப்.எஸ் செல்கள், கரு செல்களுக்கும் வயதுக்கு வந்தோரின் ஸ்டெம் செல்களுக்கும் இடைப்படியான ஆற்றல் வாய்ந்த உபயோகரமான செல்கள் என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. மரபணுக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க உதவும் நடைமுறைக்கு இது மிக, மிக முக்கியமானதாகும். 

குழந்தை பிறந்த பின்னர் தாய்மார்கள் இழக்கும் திசுக்களும் .எஃப்.எஸ் செல்களுக்கு இன்னொரு மூலமாகும். அமெரிக்காவில் வருடத்திற்கு 40 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவிலோ இன்னும் அதிகம். இந்த நிலையில் .எஃப்.எஸ் செல்கள் ஏராளமான வியாதிகளைத் தீர்க்க உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமான செய்தியாகும். உலகம் முழுவதிலும் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வருங்காலத்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில்தான் அதிகக் கவனம் செலுத்தப் போகின்றனர்.

வைட்டமின் டி மூலம் கிடைக்கும் ஆதாயங்கள்!

"
சூரிய ஒளி வைட்டமின்" என்று செல்லமாக அழைக்கப்படும் வைட்டமின் டி, எலும்புகளின் வலிவை அதிகரிப்பதோடு நமது உடல், கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது என்பதை நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவர். 

ஆனால் 2007-ம் ஆண்டில் வெளியான ஆய்வு முடிவுகள் கூடவே வேறு பல ஆதாயங்களையும் வைட்டமின் டி நமக்குத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (multiple sclerosis) நோயையும் இந்த வைட்டமின் டி விரட்டுகிறது. 

ஏன்..? கேன்ஸர் நோயைக்கூட உருவாகாமல் தடுக்கும் சக்திவைட்டமின் டி’-க்கு உண்டு என தற்போதைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கேன்ஸரையும் வைட்டமின் டியையும் தொடர்புபடுத்திய முடிவுகள், மருத்துவ உலகில் இன்னமும் உறுதி செய்யப்படாவிட்டாலும்கூட பெருங்குடலில் ஏற்படும் கேன்ஸரை அது தீர்க்கவல்லது என்கிற லேட்டஸ்ட் தகவல் நமக்கொரு நல்ல செய்திதான்! ஆகவே வைட்டமின் டியை நாள்தோறும் நம் உணவில் சேர்க்க வேண்டியது நமது கடமையாகும்!