திங்கள், 12 மே, 2014

குடல்வால் வெடித்தால் ஆபத்தா...

லேபராஸ்கோபி என்றால் என்ன? என்னென்ன பிரச்னைகளுக்காக லேபராஸ்கோபி

 சிகிச்சை செய்யலாம்?


இந்த அறுவை சிகிச்சை முறை நுண்துளை அறுவை சிகிச்சை என்றழைக்கப்படும். அதாவது சிறு துளை மூலம் உடலினுள் உள்ள உறுப்புகளை பரிசோதனை செய்து வீடியோ மானிட்டரில் பார்த்து சிகிச்சை சிகிச்சை அளிக்க உதவுகிறது. இது டயக்னோஸ்டிக் லேப்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. அப்பன்டிஸ் சைடிஸ் எனப்படும் குடல் வால் பிரச்னை, பித்தப்பை பிரச்னைகள், கட்டிகள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் குடல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் லேபராஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அபன்டிக்ஸ் எனப்படும் குடல்வால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறி என்னென்ன? குடல் வால் வீங்கி வெடித்தால் ஆபத்தா?

அபன்டிக்ஸ் எனப்படும் குடல்வால் வீங்குவதால் பாதிப்பு உண்டாகும். அதற்கு அப்பன்டிஸ் சைடிஸ் என்று பெயர். இதற்கு அறிகுறி வலது அடிவயிற்றில் அதிகமான வலி ஏற்படும். வாந்தி மற்றும் காய்ச்சல் உண்டாகும். வீக்கம் அதிகமாகி வெடித்தால் ஆபத்து. வலி ஆரம்பித்தவுடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு இன்சுலின் சுரக்கும் அளவில் குறைவு ஏற்பட்டால் சர்க்கரை நோய் உருவாகிறது. சில சமயம் கணையம் நீர் சுரந்து குடலில் சேரும் பாதையில் கல் உருவாகும். மேலும் குழாய் சுருங்கி பாதை அடைபட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு லேபராஸ்கோபி மூலம் சிகிச்சை அளித்து கல்லை அகற்றலாம் மற்றும் சுருங்கிய குழாயை விரிவுபடுத்தலாம்.

அல்சரைத் தவிர்க்க என்ன உணவுமுறை அவசியம்?

உணவு முறை (துரித உணவு), புகை பிடித்தல், ஆல்கஹால், நேரத்திற்திற்கு உணவருந்தாமை மற்றும் டென்சன் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலம் அதிகமாக சுரக்கும்போது ஹெச் பைலரி கிருமியினால் அல்சர் உருவாகிறது. அல்சரைத் தவிர்க்க அவைகளை தவிர்ப்பது நல்லது.

குடல் நோய்கள் என்பவை யாவை? அவற்றை எவ்வாறு தவிர்ப்பது?

உணவுக்குழாயிலிருந்து தொடங்கி ஆசனவாய் வரை உள்ள உறுப்புகளில் ஆயிரக்கணக்கான குடல் நோய்கள் உருவாகின்றன. நேச்சரல் ஃபுட் என்றழைக்கப்படுகிற இயற்கையான உணவுகளை உட்கொண்டால் குடல்நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். உணவு சம்பந்தமான விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால் குடல் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

அதிகமான மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் உடலிற்கு பக்கவிளைவை ஏற்படுத்துமா?

மருந்து மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்தும். எனவேதான் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் போது பக்கவிளைவை ஈடுகட்டும் மருந்துகளையும் சேர்த்து கொடுப்பார்கள். எனவே தான் எந்தவொரு மருந்தையும் மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் உட்கொள்ளக்கூடாது.

குழந்தைகளுக்கு குடற்புழு எதனால் உருவாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடற்புழு மருந்து கொடுக்கலாம்?

மண்ணில் விளையாடும்போது புழு முட்டைகள் கையில் ஒட்டிக்கொண்டு வயிற்றினுள் செல்லும் போது குடற்புழு உருவாகிறது. குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனையின் பேரில் குடற்புழு மருந்து கொடுக்கலாம்.

குளிர்பானம், சோடா போன்ற திரவ உணவுகள் உடலுக்கு நல்லதா?

குளிர்பானம், சோடா போன்ற பானங்கள் காற்று அடைத்த திரவங்களாகும். மேலும் அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. எனவே இது உடலிற்கு கேடு விளைவிப்பவை ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.