ஞாயிறு, 11 மே, 2014

அடைத்திட முடியாத கடன்…



கருப்பைச் சுவர்க்கிடையே

கருவாக எமைத்தாங்கி

உருவாக்கி உயிர் தந்து

உலகிற்குள் எமைத்தந்த, அன்னைக்கு ஓர் தினமாய்

அகிலமே போற்றுமின்று

எம்மைச் சுமந்தவளை

எள்ளளவிலேனும் நினைப்போம்.

பட்ட கடன் உணர்வோம்

பாச மழை பொழிவோம்-எமக்காய்

முற்றும் துறந்தவளின்

காலைத் தொட்டு வணங்கிடுவோம்

ஆயிரம் ஆண்டுகள்

ஆயுள் இருந்தாலும்

அன்னையிடம் பட்டகடன்

அடைத்திட முடியாத கடன்.


1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.