புதன், 28 ஜனவரி, 2015

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்...


உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

ஏழு பிறப்புகளும் / ஏழு நோய்களும்



"ஏழ் பிறப்பும், உன்னை விடாது"  "ஏழு பிறப்பும், ஏமா புடைத்து"
"ஏழு சென்மம் எடுத்தாலும்"

இது போன்று ஏழு பிறப்பு இருப்பதாக தமிழ் மக்கள் கூறிவருது இன்றும் வழக்கத்தில் இருந்துவருகிறது. இவற்றின் உண்மை என்ன? 
நாம் உண்ணும் உணவானது இரைப்பையில் சென்று சீரணம் ஆகி, கல்லீரல், மண்ணீரல், பருகும் நீர் மூன்றும் கலந்து ஒரு விதமான நீர்மம் ஆகும். இந்த நீர்மம் 7  விதமான நீர்மம் ஆகும். இந்த 7 விதமான தாதுக்களாக பிரியும். அவை முறையே இரசம், இரத்தம், கொழுப்பு, நரம்பு, மஞ்ஞை, சுக்கிலம் என்பனவாம். இவைகள் தாம் நம்மை வளர்க்கும் தாதுக்கள்(Occult  Power ) ஆகும். இவைதான் நமக்கு ஏழு பிறப்பு என்பது. இவை சீராக நடந்தால் நல்ல ஆரோக்கியமான உடல்  வளம் பெறலாம். மாறாக நடக்குமென்றால் நோய் என்கிறோம். மேற்கண்ட காரணத்தால் 'அன்ன தானம்' மேன்மையை தானமாக கருதப்படுகிறது. மேற்படி தாதுக்களில் ஏற்படும் குறைகள் காலத்தால் தொடர்ந்து இருக்குமென்றால் அவை, நோய், வியாதி, உரோகம், பிணி,பீடை, சீக்கு,கன்மம் என்னும் ஏழு விதமான குற்றங்களை(நோய்களை) தரும்.


மேற்படி சீரணம் சீராக நடக்க வேண்டும் என்றால் முறையான உணவு உட்கொள்ள வேண்டும். கொளுத்த, பருத்த, வறுத்த உணவுகளை உண்ணக்கூடாது. மேற்படி சீரணம் எப்படி நடக்கிறது என்றால் நாம் நம் அன்னை, தந்தையிடம் இருந்து கடன் பெறப்பட்ட நாத, விந்து, கலை(Entoplasm, Cytoplasm,  Ectoplasm) என்ற அடிப்படையான மூன்று சக்திகளால் ஆகும். எனவே உடம்புக்கு 'கடம்' என்று பெயர். இதையே "நாத விந்து கலை ஆதி நமோ நாம" என்று அருணகிரி பெருமான் விளக்கியுள்ளார். இந்த சக்திகள் நம் உடம்பில் உப்பு வடிவமாக இருக்கின்றன. அவைகள் மொத்தம் 27 ஆகும். ஆதலால் தான் "உப்பிட்டவரை உள்ளவும் நினை" என்பது. ஓட்டலில் உப்பு போடும் ஊழியரை (அ)  உறவினரை அல்ல. நம் உடம்பை தந்த தாய், தந்தையரையே குறிக்கும். நாம் இருக்கும் வரை நினைத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது. 

மேற்படி விந்து, நாதங்கள், கலையில் ஏற்படும் மாறுபாடுகளே மரபு நோய்களுக்கு காரணம். ஆதலால் கண்ட உணவுகளை உண்டு தாதுக்களின் குற்றத்தை அதிகப்படுத்தி நோய்களை பெருக்கி கொள்ள வேண்டாம். 
"நோய்க்கு இடங்கொடேல்"  - அவ்வை பாட்டி  
விந்து குற்றம் அதிகமானால்  -- கண் நோய்கள், நீரழிவு, மேக நோய், மோக நோய், நரம்பு தளர்ச்சி, வாத நோய் வரும்.
நாதம் குற்றம் ஏற்பட்டால் -- காது கேளாமை, பக்கவாதம், முடமான குழந்தைகள், கருப்பை கோளாறுகள் வரும்.

கலை குற்றத்தால்  --- குறைந்த ஆயுள், ஊமை குழந்தைகள், சுவாச கோளாறுகள், இரண்டு தலை, அதிகமான விரல்கள்(உறுப்புகள்)  உள்ள குழந்தைகள், பைத்திய நோய்கள் வரும். 

இவற்றை மருந்துகளை மூலம் நிவர்த்தி செய்வது  முடியாத செயல். 

எனவே அவரவர் நல்ல உணவு உண்டு, ஒழுக்கத்தோடு வாழ்வதும், பின்வரும் சந்ததிகளை வாழவைப்பதும் நமது கடமை. வள்ளுவரும் இதை,
"தம்பொருள் என்பதாம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினால் வரும்" என்கிறார். 

ரத்த தானம் செய்வோம்


ஆக்சிஜன், குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களுக்கும் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறது ரத்தம். திசுக்கள் வெளியிடும் கழிவுகளைச் சுமந்து சென்று நச்சுக்கள் உடலில் சேரவிடாமல் வெளியேற்றவும் உதவுகிறது.  விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சியடைந்த போதும், ரத்தத்தின் வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு திரவத்தை, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
யாருக்கு ரத்தம் தேவை ?
  உலகம் முழுவதும் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ரத்தம் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும். விபத்தில் மனிதர்கள் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணம் ரத்த சேதமாகும். உடனடியாக இந்த இழப்பைச் சரிசெய்வதன் மூலம், உயிர் காக்கப்படும்.
  அறுவைசிகிச்சை செய்யும்போது ரத்த இழப்பு ஏற்படும்.  எனவே புதிய ரத்தம் உட்செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
  பிரசவ கால ரத்த இழப்பு (குழந்தை பிறந்த பின் கருப்பை சுருங்காமல் இருப்பது).
  தலசீமியா  நோயாளிகளுக்கு.
  ரத்த சோகை உள்ளவர்களுக்கு.
யார் ரத்த தானம் செய்யலாம்?
  18 வயது முதல் 65 வயதுடையவர்கள்.
  எடை 45 கிலோவுக்கு மேல்.
  ஹீமோகுளோபின் அளவு 12.5 கி/டி.எல்  மேல் உள்ளவர்கள்.
  ரத்த அழுத்தம் இதயம் விரிவடையும்போது    (Diastolic) 100/60 முதல் இதயம் சுருங்கும் போது  (Systolic) 150/100 வரை உள்ளவர்கள்.
  தொடர்ந்து தானம் செய்யும் கொடையாளர்கள் 3 மாத இடைவெளியில் தானம் செய்யலாம்.
யார் ரத்ததானம் செய்யக்கூடாது?
  ஒரு வார காலத்துக்குள் சளி, காய்ச்சல் இருப்பவர்கள்.
  ஆறு மாதங்களுக்குள் பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். மற்றும் மூன்று மாதங்களுக்குள் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்.
  மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் குணமான மூன்று மாதம் வரையிலும் ரத்த தானம் செய்ய வேண்டாம்.
  மஞ்சள்காமாலை சிகிச்சை முடிந்து ஒரு வருடத்துக்கு முன்னதாக செய்யக் கூடாது.
  பால்வினை நோய், ஹெச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர்.
  மாதவிடாய்க் காலங்களிலும், கருவுற்றிருக்கும் போதும், தாய்ப்பாலூட்டும்போதும் பெண்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.
  சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், ரத்த உறைதல் குறைபாடு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
  மது அருந்தியவர்கள்.
  சமீபத்தில்  தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்கள்.
எங்கு ரத்ததானம் செய்ய வேண்டும்?
  அரசு ரத்த வங்கிகள்.
  அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகள்.
  அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் நடத்தும் ரத்ததான முகாம்கள்.
எவ்வாறு ரத்த தானம் பெறப்படுகிறது?
  முதலில் கொடையாளியின் பெயர், முகவரி, ரத்த வகை பதிவுசெய்யப்படுகிறது.
  கொடையாளியின் மருத்துவக் குறிப்புகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், தாக்கியுள்ள நோய்கள் முதலியவை கேள்வி,பதில் மூலமாக பதிவுசெய்யப்படுகின்றன.
  ரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளியின் எடை, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகளைப் பொறுத்தே ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
  ஒவ்வொரு கொடையாளிக்கும் தனித்தனி ஊசி செலுத்தித்தான் ரத்தம் பெறப்படும். எனவே, நோய்த்தொற்று பயம் வேண்டாம்.
  ரத்தக் கொடையாளிகளுக்கு ரத்தம் கொடுத்தவுடன், புத்துணர்ச்சி பெற குளுக்கோஸ், குளிர்பானங்கள் வழங்கப்படும். இவற்றை நிச்சயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  ஒரு முறை ரத்ததானம் செய்ய,அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
ரத்த தானம் செய்வதால் என்ன நன்மை?
  மாரடைப்பு வருவது குறைகிறது.
  புதிய ரத்த அணுக்கள் உருவாகின்றன.
  ஒருமுறை ரத்த தானம் செய்வதால், 500 கலோரிக்கும் மேலாக எரிக்கப்படுகிறது.
  உடலில் அதிகமாக  உள்ள இரும்புச்சத்து  வெளியேற்றப்படுகிறது.
  ஒருமுறை ரத்த தானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களைக் காப்பாற்ற இயலும்.
ரத்த தானம் சில தகவல்கள்
  கார்ல் லாண்ட்ஸ்டெயினர் (Karl landsteiner) என்பவர்தான் ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ  என்று நான்கு வகைகள் உள்ளன என்று 1901 ஆம் ஆண்டு நிரூபித்தார்.
  ஒரு முறை பெறப்பட்ட ரத்தம்,  சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டு அணுக்கள், கிரையோ பிரிசிபிடேட் (Cryo Precipitate)  என நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டு, நான்கு பயனாளிகளுக்குச் செலுத்தப்படும்.
  சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும், தட்டு அணுக்கள் ரத்தம் உறைவதற்கும், பிளாஸ்மா தீக்காய சிகிச்சைக்கும் பயன்படுகின்றன.
  ஓ நெகடிவ் ரத்தம்தான் மிகவும் அரிதானது, பி(பாசிடிவ்) பிரிவு ரத்தம் எளிதில் கிடைக்கக் கூடியது.
  ரத்த தானம் கொடுப்பதற்கு முன்னும் கொடுத்த பின்னரும் நிறைய சாப்பிடவேண்டும், ரத்த தானத்துக்குப் பிறகு, நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், எடை தூக்கக் கூடாது, வேலை செய்யக் கூடாது போன்றவை எல்லாம் தவறான நம்பிக்கைகளே.
  ரத்த தானம் கொடுத்த மறுநாளே வழக்கமான வேலைகளை தாராளமாக செய்யலாம்.
  18 வயதில் ரத்தம் கொடுக்கத் தொடங்கி, 3 மாதங்களுக்கு ஒருமுறை 60 வயது வரை ரத்தம் கொடுத்தால் 500 உயிர்களை ஒருவரால் காப்பாற்ற முடியும்.

வியாழன், 22 ஜனவரி, 2015

மூளை வளர்ச்சி குன்றிய தன்மை: அக்குபஞ்சர் உதவும்


ந்தக் காலத்தில் வாழ்ந்த மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையைவிட இந்தக் காலகட்டத்தில் வாழும் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

88 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டுடன் பிறக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள், பரபரப்பான வேலைகள், அழுத்தம் நிறைந்த சிந்தனைகள், தரமற்ற, சத்துக் குறைந்த பெருந்தீனி உணவுகள், நேரங்கெட்ட வேளையில் சாப்பிடுவது, உறங்குவது ஆகியவையே இதற்குக் காரணம்.
இவற்றுடன்கூட கருவுற்ற காலத்தில் எடுக்க வேண்டிய ஓய்வு, கிடைக்க வேண்டிய அரவணைப்பு, மன நிம்மதி ஆகியவை இந்தக் கால கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கிறதா என்றால், அது ஒரு கேள்விக்குறிதான்.
இந்தக் கால இளைஞர்களின் வேலைப்பளு, ஆண் பெண் ஒன்றாக படிப்பதால், வேலைபார்ப்பதால் குறைந்த பால் கவர்ச்சி, எல்லாவற்றையும் பற்றிய அதீத அறிவு- இவையெல்லாம் சேர்ந்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலத்தில் உருவாகும் கரு இவ்வித குறைபாடுகளுடன் வருவது இயற்கையே. குறைபாடுகளில் பல வகைகள் உண்டு.
1. மதியிறுக்கம் (மூளைச் செயல் திறன் குறைபாடு); 
2. மூளைத் தசை இயக்க பாதிப்பு;
3. பிறவிக் குறைபாடுகள் எனப் பல வகைகள் உள்ளன.
வளர்ந்த நாடான அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 லட்சம் குழந்தைகள் இந்த வகை குறைபாடுகளில் உள்ளனர்.
அக்குபஞ்சர் முறையில்...: இந்த மருத்துவ முறையில் பிரச்னையை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பு உண்டு. ஏனெனில் பிரச்னைக்கான காரணம், அக்குபஞ்சர் முறையில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுநீரகம், இதயம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஓடுபாதைகளில் ஏற்படும் குறைபாடுகள்தான் இதற்குக் காரணம் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தினமும் 20 நிமிஷங்கள் 2 முறை என 90 நாள்கள் அக்குபஞ்சர் மருத்துவம் செய்தால் 25 முதல் 30 சதவீத குணம் தெரியும். பின்பு மாதத்தில் 15 நாள்கள் மருத்துவம் என 3-6 மாதங்கள் செய்தால் முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். மூளைச் செயல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் சாதாரண பள்ளிகளில் சென்று படிக்கலாம்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

சினைப்பை நீர்க்கட்டிகள்



1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?
பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.


2. ஒழுங்கற்ற உணவுமுறை சினைப்பை கட்டிகளுக்கு காரணமாகுமா?ஒழுங்கற்ற உணவுமுறை, ஹார்மோன் சுரப்பில் சிக்கலை உண்டாக்கி, சினைப்பை நீர்க்கட்டிகளை உருவாக்கும். இக்கட்டிகள் உருவாகிவிட்டால், ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். அதிலும் ‘டெஸ்டோஸ்டிரான்’ மிக அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது முற்றிலும் தடைபடும்.

3. நீரிழிவு நோய்க்கும் சினைப்பை கட்டிகளுக்கும் தொடர்புண்டா?
நிச்சயம் உண்டு. பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும், அவர்களின் பெண்ணுக்கு சர்க்கரை நோய்த் தாக்கத்துடன் இத்தகைய நீர்க்கட்டிகளின் தாக்கமும் இருக்கும். பிறப்பிலேயே, அவர்களுக்கு இன்சுலினுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அமையப் பெற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்!



4. சினைப்பை கட்டிகளோடு, கருவும் உருவாகிவிட்டால் ஆபத்தா?
நிச்சயம் ஆபத்துதான்! கரு உருவாவதற்கு கரு முட்டைகள் அவசியம். ஆனால், கரு வளர்வதற்கு ஏற்ற இடம் கர்ப்பப்பை மட்டுமே! நெல்லிக்காய் அளவில் இருக்கும் சினைப்பையால் கரு வளர்ச்சியின் அழுத்தத்தை தாங்க முடியாது. ஒரு மாத கருவோ அல்லது இரு மாத கருவோ சினைப்பையில் இருந்து வெடித்துவிட்டால், தாய் உயிருக்கே ஆபத்து.



5. சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது?
கர்ப்பப்பையின் வலது, இடது பக்கங்களில் நெல்லிக்காய் அளவில் முட்டை உற்பத்தி செய்யும் பகுதிதான் சினைப்பை. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் இருந்து, இந்த சினைப்பை பகுதியில் நீர்க்கட்டிகள் உற்பத்தியாகும். இரண்டாவது வாரத்தில், இவைகள் வெடித்து, கருமுட்டையை வெளியேற்றும். இம்முட்டைகள் கருக்குழாய் வழியாக கர்ப்பப்பையை அடையும். சில சமயங்களில், ஹார்மோன் சுரப்பிகளின் வேறுபாட்டால், இந்த நீர்க்கட்டி வெடிக்காமல் 25 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து விடும்.



6. சினைப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்?
அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் அல்லது மாதவிடாய் சில மாதங்களுக்கு வராமலே இருக்கும். உடல் பருத்து விடும். முகத்தில் ரோமங்கள் முளைக்கும். தோலின் நிறம் மாறும். உடலில் பல்வேறு இடங்களில் கருமை அதிகரிக்கும். ஆண்தன்மை ஏற்படும்.



7.சினைப்பை நீர்க்கட்டி மலச்சிக்கலை உண்டாக்குமா?
சில கட்டிகள் 35 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து, வயிறு முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால், அருகருகே இருக்கும் மற்ற உறுப்புகளை இக்கட்டி அழுத்தும். இதன்மூலம் சிறுநீர் கழிக்கும்போதும், மலம் கழிக்கும்போதும் பிரச்னைகள் உருவாகும்.



8. அதீத மகப்பேறு இடைவெளி நீர்க்கட்டிகளுக்கு ஆதாரமா?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் குழந்தை பிறக்கும்போது சினைப்பை நீர்க்கட்டி இல்லை. ஆனால், இரண்டாவது குழந்தைக்கான இடைவெளியில் சினைப்பை நீர்க்கட்டிக்கான தாக்கம் இருந்தால், கண்டிப்பாக இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்பு தள்ளிப்போகும்.



9. சினைப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும் முறைகள்?
அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் எடை குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெய் பலகாரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக கற்கள்


1.பொதுவாக, சிறுநீரகத்தின் பணி என்ன? 
உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று! ரத்தத்தில் உள்ள கழிவுகள், சிறுநீராக வெளியேறவும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சம அளவில் வைக்கவும், சிறுநீரகம் உதவுகிறது. இதோடு, உடலில் உள்ள அமிலம், காரம் மற்றும் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

2’சிறுநீரக கற்கள்’ உருவாவது எப்படி?
நமது குடிநீரிலும், உணவிலும், பல தாது உப்புகள் உள்ளன. உணவு செரிமானத்திற்குப் பின், இவை சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. சிலசமயம், ரத்தத்தில் 
‘தாது உப்புக்கள்’ அதிகமாகும் போது, இவை வெளியேற சிரமப்படும். இதனால், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழாய்களில் இந்த தாது உப்புகள் படிந்து, கல்லாக மாறும். மேலும், தவறான உணவு பழக்கம்; கால்சியம், குளோரைடு, பாஸ்பேட், யூரியா உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்த தண்ணீர் பருகுதல்; சிறுநீர் அடக்குதல் இவற்றாலும் சிறுநீரக கற்கள் உருவாகும்! 

3’சிறுநீரக கற்கள்’ தரும் பாதிப்புகள்? 
சிறுநீர் ஓட்டம் தடைபடும்; சிறுநீரகத்தில், சிறுநீர் குழாய்களில் சிறுநீர் தேங்கும்; சிறுநீரகம் வீங்கி, சிறுநீரக அழற்சி உண்டாகும்; முறையான சிகிச்சை இல்லாவிடில், உயிருக்கும் ஆபத்தாகும்! 

4சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்? 

ஆரம்பத்தில் அறிகுறி ஏதும் இருக்காது; ஆனால், சிறுநீரக கற்கள் நகரும் போதும், சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் போதுதான், வலி உண்டாகும்! முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ், கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும்! சில சமயங்களில், சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம் வரை கூட, வலி இருக்கும்! 
5’சோடியம் குளோரைடு’ நிறைந்த உணவு, சிறுநீரக கற்களுக்கு காரணமாகுமா? 

தினசரி உணவில், 2.5 கிராம் ‘சோடியம் குளோரைடு’ இருப்பது போதுமானது! இவை அதிகமானால், அதிக அளவில், ‘கால்சியம்’ வெளியேறிவிடும். இதனால், ஆக்சலேட், பாஸ்பேட் போன்ற தாது உப்புக்களோடு, சோடியம்
குளோரைடு சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும்! 

6சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க…? 

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, சீத்தாப்பழம், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள்; சிட்ரஸ் பழச்சாறுகள்; வாழைத்தண்டு சாறு; பார்லி தண்ணீர்; நீர்மோர்; இளநீர்; கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள தானிய வகைகளை,
அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது! 

7’சிறுநீரக கற்கள்’ பிரச்னை உள்ளவர்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள்? 

‘பாஸ்பேட்’ தாது உப்பு மிகுந்த காபி, தேநீர், பிளாக் டீ, கோலி சோடா, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லெட் உள்ளிட்டவை சிறுநீரக கற்களை உருவாக்கும். இவைதவிர, ஆட்டிறைச்சியில் உள்ள புரதம், ரத்தத்தில் உள்ள ‘யூரிக்’ அமிலத்தை அதிகப்படுத்தி, ‘சிட்ரேட்’ அளவை குறைத்து, சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும்! 

8.சிறுநீரகம் செயலிழக்க, சிறுநீரக கற்கள் காரணமாகுமா? 

சிறுநீரக கற்களால், உடனடியாக சிறுநீரகத்திற்கு பாதிப்பு இருக்காது. ஆனால், நாள் கணக்கில் சிறுநீரக கற்கள், சிறுநீர் பையில் தங்கும்போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் ரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்படும். நாளடைவில், கொஞ்சம், கொஞ்சமாக சிறுநீரகம் செயலிழந்து போகும்! 

9.சிறுநீரக பாதிப்பு, ரத்தத்தில் சிவப்பணுக்களை குறைக்கும் என்பது…? 

உடலில் சிவப்பணுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும், ‘எத்தோபாய்ட்டின்’ எனும் ஹார்மோன் சுரக்க சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், இந்த ஹார்மோன் சுரப்பில் குறை ஏற்பட்டு, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும். இதனால், ‘ரத்தசோகை’ உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

முத்தான முதலுதவிகள்

முதலுதவி செய்யமுன் கவனிக்க வேண்டியவை


1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
2. சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
3. நோயாளருக்கு உதவியளித்தல்.

தீ விபத்துக்கான முதலுதவிகள்
  • விபத்து நடந்த இடத்தில் யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால், முடிந்தவரை தண்ணீர் ஊற்றி அணையுங்கள். சாக்குப்பையை சுற்றுவதெல்லாம் மிக மிக கொடூரமான தியணைக்கும் முறை. சாக்குப்பையை பொருள் தீப்பிடித்துக்கொண்டால் அதை அணைக பயன்படுத்தலாம். ஆனால் மனிதன் மீது தீப்பிடிக்கும்போது தண்ணீரே சிறந்த மருந்து. தவறிப்போயும். மணலையெல்லாம் போட்டு அனைக்க முயன்று விடாதீர்கள். அது நாமே அவரை கொலை செய்வது போல கும்.
  • ஒரு வேளை தீ தானே அணைந்துவிட்டாலும் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் மீது தண்ணீரை ஊற்றுங்கள் . காரணம் வெந்த புண்ணிற்கு குளிர்ச்சி அப்போது மிக அவசியம். அப்போது நாம் ஊற்றாமல் போகும் தண்ணீர் அவரின் உயிரை எடுத்து விடலாம்
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
  1. வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
  2. முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். 
  3. ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
  4. உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்.
  5. உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  6. எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
  7. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்
  1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
  2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
  3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
  4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
  6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
  7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
  8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
  9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
  10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் காக்கும் முதலுதவி
CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம் 

  • இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது 
  • இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது 
  • உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது 
  • விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது >தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது அதிர்ச்சியின் போது ( in a state of shock) 
  • வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது 
  • மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock) 
  • இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால்) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். 
  • ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்) 
  • இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்) 
  • நினைவிருக்கிறதா என உறுதி செய்தல் 
  • சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல் 
  • உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது. சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது;                       (தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்) ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது. இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும். CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு. அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம். நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும். பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும். மூன்றாவதாக-Circulation.

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம். நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.

காது குடையலாமா?





காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம்சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்பமுயன்றபோது, “தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.



“என்ன நடந்தது” என விசாரித்தேன். “வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று”என்றாள்.”காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” விசாரித்தேன். “நெருப்புக்குச்சி, சட்டைப் பின்,இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்தமகன்.காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமிதொற்றிவிட்டது.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்தியபிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணிஇயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால்குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப்பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாகநகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம்செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்குகாதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச்செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்றுகாதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ,சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப்பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்றுதடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.


காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ்அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம்செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பிம்பிள் – சிம்பிள் தீர்வு

பருக்கள் ஏன் வருகின்றன?
சருமம் எண்ணெய் பசையுடன் இருப்பதற்கு காரணம், உடலில் சீபம் என்ற எண்ணெய் சுரப்பதுதான்.ஹார்மோன் பிரச்னையால் சிலருக்கு இந்த சீபம் மிக அதிகமாகச் சுரக்கும். இந்தச் சுரப்பிகளில் தடை ஏற்பட்டாலோ, சருமத்தில் சீபம் அதிகமாகச் சுரக்கும் போதோ, சிறு கட்டிகள் போல பருக்கள் உருவாகின்றன.
சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல்,மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இன்மை, பொடுகுத் தொல்லை, காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் பருக்களை ஏற்படுத்துகின்றன.
எந்த வயதில் வரும்?
13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரலாம். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பருக்கள்வந்து மறையும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் (PCOD) இருந்தாலும் பருக்கள் வரும்.
பருக்கள் எப்படி பரவுகின்றன?
முகத்தில் மூக்கு ஓரங்கள், தாடை, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கறுப்பாகவோ, வெள்ளையாகவோ வரலாம். இதை ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்போம்.  சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றால் குருத்தாகத் தோன்றி, சீழ் பிடித்த கட்டிகளாக மாறுகின்றன. சிலருக்குப் பருக்கள் வலிக்கும்.  பருக்களை பிதுக்கி சீழ் எடுப்பது, அடிக்கடி தொட்டுப் பார்ப்பது, கிள்ளுவது போன்ற செயல்களால் பருக்கள் அதிகமாகும். சரும மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
பருக்களைத் தடுப்பது எப்படி?
சருமம் எண்ணெய் பசையா, வறண்ட சருமமா, நார்மலா எனப் பார்த்து, அதற்கான ஃபேஸ் வாஷ்களை வாங்கி, ஒரு நாளுக்கு  23 முறை முகத்தைக் கழுவலாம். 
முகத்தைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்துக்கு எனத் தனியாக ஒரு துண்டைப் பயன்படுத்த வேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளுக்கு ‘தடா’ போடுவதன் மூலமும் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
இயற்கை முறையில் பருக்களைப் போக்கலாம்!
  கொதிக்கும் நீரில் கொழுந்து வேப்பிலையைப் போட்டு ஆவிபிடிக்க வேண்டும். பிறகு, துண்டால் முகத்தை ஒற்றிஎடுத்து, குளிர்ந்த நீரால் கழுவலாம்.  
  புதினா, துளசி, வேப்பிலை, தலா நான்கு இலைகளை எடுத்து, இதனுடன் சிறிது மரிக்கொழுந்து சேர்த்து, சாறாக அரைத்து, கடலை மாவுடன் கலந்துகொள்ளவும். முகம், மூக்கு ஒரங்களில் இந்தச் சாறைப் பூசி, 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் கழுவலாம்.
  எங்கு பருக்கள் மிகுதியாக இருக்கிறதோ, அந்த இடத்தில், அரைத்த பூண்டு விழுதைப் பூசி,    15  நிமிடங்களுக்குப் பின் கழுவலாம்.  முகம் முழுவதும் தடவக் கூடாது.
  லவங்கம்  2, மிளகு  2, முல்தானிமட்டி  அரை டீஸ்பூன் எடுத்து பேஸ்ட்டாக்கி, பருக்களின் மேல் தடவலாம்.
  ரோஜா இதழ்களை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, ஆறவைக்கவும். இந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, அடிக்கடி எடுத்து முகம் கழுவலாம். பருக்கள் வராது. முகத்திலும் பொலிவு கூடும். 
  கொட்டைகள் நீக்கப்பட்ட தக்காளிச் சாறு  2 ஸ்பூன், ஜாதிக்காய்த் தூள், மாசிக்காய்த் தூள்  தலா 1 டீஸ்பூன், சந்தனத்தூள்  2 சிட்டிகை இவற்றை கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும்.
  பயத்த மாவு  ஒரு டீஸ்பூன், எலுமிச்சை இலை  2, வேப்பிலை  1, கஸ்தூரி மஞ்சள்  அரை டீஸ்பூன் ஆகியவற்றை  அரைத்து, பன்னீருடன் கலந்து முகத்தில் பூசலாம்.
  வெள்ளரிச் சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை சமஅளவில் எடுத்து, அதில் பார்லி பவுடர், முல்தானிமட்டி தலா 2 ஸ்பூன் கலந்து, மிக்ஸியில் அரைத்து, பருக்கள் வந்த இடங்களில் அடர்த்தியாகப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பருக்கள் மறையும்.  வராமலும், பரவாமலும் தடுக்கப்படும்.