சனி, 30 மே, 2015

கனவுகள்- ஒரு மர்மம்



நம் உடலில் நிகழும் பல விடைதேறி
யா நிகழ்வுகளில் கனவுகளும் ஒன்று.அனைவருக்கும் கனவுகள் வருமா, கனவுகள் ஏண் வருகின்றன, அதற்கு அர்த்தங்கள் இருக்குமா,? கனவுகளை கட்டுபடுத முடியுமா ?
அறிந்து கொள்வோம்.

மனித உடல் தூங்கும்போது நான்கு நிலைகள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. முதல் மூன்று நிலைகளில் நமது உடல் வெப்பநிலை குறைந்து, ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைத்து ஆழ் நிலை ஊரகதிற்கு செல்லும்.இந்த நிலைகளில் நம் உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்து உடலின் பெரும்பலன் பாகங்கள் ஓய்வில் இருக்கும்.

இட்ந்த மூன்று நிலைகளிலும் நம் விழி அசைவற்ற ஊரகதில் இருப்போம்(NREM – Non Rapid Eye Movement ). நான்காவது நிலையை அடையும் பொது நம் விழிகளில் அசைவு இருக்கும். (REM -Rapid Eye movement) .இந்த நிலை 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். நிலையில் தான் நமக்கு கனவுகள் வருகின்றன. நாம் மோத துக்காதில் 25% மேலாக நாம் ஆர்‌இ‌எம் (REM)நிலையில் கழிக்கிறோம்.இந்த நான்கு நிலைகளும் மாறி மாறி தொடர்ச்சியாக நம் கண்விழிக்கும் வரை வந்து கொண்டே இருக்கும்.

நாம் அனைவரும் கனவு காண்கிறோம்.சிலர் இதை மறுத்தாலும் அது தான் உண்மை.ஆனால் கனவுகளை நமது மூளை உடனே நமது ஞாபகதிலிருந்து நீக்கி விடுகிறது.நாம் விழிக்கும் நேரத்தில் கண்ட கனவு மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கும். அதாவது 95% கனவுகள் நமக்கு விழிக்கும் முன்பே மறந்துவிடுகின்றன.

உங்களுக்கு தெரியுமா?

நமது வாழ்நாளி ல் 6% கனவிலயே கழிக்கிகிறோம்

குழந்தைகளும் கனவு காண்கின்றன. அவைகளுக்கு மொழி தெரியாததால் அவர்களின் கனவுகள் வெறும் ஊமை படம் போன்று மொழி பரிமாற்றம் அற்ற கனவுகளாக தோன்றும். குழந்தைகள் பெரியவர்களை போன்று இரண்டு மடங்கு நேரத்தை நான்காம் நிலை உறக்கதில் ( REM in total sleep- 50% ) கழிக்கின்றன.

அதேபோல் மூன்று வயதிற்கு முன்பே பார்வை இழந்த, பிறவியிலயே பார்வை அற்றவர்களும் கனவு காண்கின்றன.அவர்களின் கனவுகளில் ஒலி,சுவை, ஸ்பரிசம், மணம் போன்ற மற்ற நான்கு புலன்கள் தொடர்புடைய கனவுகள் தோன்றும்.

உங்களுக்கு தெரியுமா?

சில விலங்குகள் கூட கனவு காண்கின்றன.

கனவு காணும் பொது நமது உடல் முழுவதும் (விழி திரை தவிர்த்து) செயலாற்ற நிலையில் (paralysis) இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?, அதனால் தான் நம்மை கனவில் நம்மை யாராவது துரதினாலும் நிஜத்தில் நமது உடல் ஓடுவதில்லை.இந்த கட்டுபாடு இல்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்தித்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.