வியாழன், 18 ஜூன், 2015

நாடித் துடிப்பு

முன்னோர்கள் பயன்படுத்திய முறை



முன்கையில் மணிக்கட்டுக்கு கீழே இரத்தக் குழாயை நமது 3 விரல்களைக் கொண்டு ரத்த துடிப்பை வைத்து நாடியை அறிவது.

அல்லோபதியில் 'இருதய நாடி' மட்டுமே பார்க்கப் படுகிறது. சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இவற்றில் 'வாத, பித்த, கப நாடிகள்' ஆகிய மூன்று பார்க்கப்படுகிறது.

உடலின் உயிர் சக்தி எவ்வளவு என்று நாடியைக் கொண்டு கணிக்கலாம். சித்த வைத்தியத்தில் வாதம், பித்தம், கபம், என்பர். சீனர்கள் இதை சுன், குவான், சி என்பர். மணிக்கட்டை ஒட்டி ஆட்காட்டி விரலும், அதையடுத்த நடுவிரலும், அதையடுத்து மோதிர விரலும் வைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரல் (சுன்) = வாத நாடி

நடுவிரல் (குவான்) = பித்த நாடி

மோதிரவிரல் (சி) = சிலேத்தும் அல்லது கப நாடி.

கையினால் மெதுவாக நாடியைத் தொடும்போது நாடித்தன்மை வேகமாகத் துடித்தால் அது கபம் சம்மந்தப்பட்ட நோய் (சி-நோய்) என்பர்.

வயதுக்கு ஏற்ற நாடித்துடிப்பு

கருவில் உள்ள குழந்தைக்கு = 150-140
பிறந்த குழந்தைக்கு = 140-130
வருடத்துக்கு பத்து துடிப்பு குறையும்.
3 வருடக் குழந்தைக்கு = 108-90
14 முதல் 21 வயதுவரை = 88 -80
21 முதல் 60 வயதுவரை = 85-80
60 வயதுக்கு மேல் = 80-67

(உடலில் ஒரு டிகிரி வெப்பம் கூடினால் 10 துடிப்பு கூடும்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.