ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நோக்கு வர்ம செயல்பாடு!




நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும்.

இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே

பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

இந்த வாயுக்கள் நமது நாடிகளின் ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.

இத்தகைய நுட்பமான வர்ம ஸ்தானங்களில் அடி படும் போது அவை உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை. “படாத இடத்தில் பட்டு பொட்டென போய்விட்டான்” என்கிற பேச்சு வழக்குகள் இந்த நுட்பமான வர்ம ஸ்தானங்களில் படும் அடியினையே குறிப்பிடுகிறது.

இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம்.

இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வாயுக்கள் சந்திக்கும் நுட்பமான வர்ம புள்ளிகளே நோக்கு வர்மத்தில் பயன் படுத்தப் படுகிறது. இந்த புள்ளிகளின் மீது கவனக் குவிப்போடும், தன் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகளை உண்டாக்க முடியும் என்கிறார் அகத்தியர்.

பார்வையின் தீவிரம் பொறுத்து ஒருவரை நிலை குலையச் செய்வதில் துவங்கி, அவரை மயக்கமடையச் செய்யவோ அல்லது அவரின் உயிரினை போக்கவோ செய்திட முடியுமாம். இவை தவிர இன்னும் மேம்பட்ட நிலையில் அவரை தன் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கவும் முடியும் என்கிறார். இதைத்தான் சமீபத்தைய திரைப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர்.

கீழே உள்ள படத்தில் நமது முகத்தில் உள்ளதாக அகத்தியர் சொல்லும் நோக்கு வர்ம புள்ளிகளை சிவப்புப் புள்ளியால் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த படத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருத வேண்டுகிறேன். யாரும் ஆர்வ மிகுதியினால் விஷப் பரிட்சைகளில் இறங்கிட வேண்டாம். ஏனெனில் நம்மைப் போன்றவர்களால் இதனை நிச்சயம் கைக் கொள்ள முடியாது. குருமுகமாக முறைப்படியான தொடர் பயிற்சிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஊடே வளர்த்தெடுக்கப் பட வேண்டியது இந்தக் கலை.

இந்த நோக்கு வர்ம தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் வழிவகைகள் இருக்கின்றனவாம். அவற்றை குருமுகமாகவே அறிவது சிறப்பு என்பதால் அதை இங்கே ஒரு தகவலாக மட்டுமே பதிந்து வைக்கிறேன். தற்போதும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் தேர்ந்த வர்மக் கலை ஆசான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களைத் தேடியறிந்து பணிந்து இந்தக் கலையினை பழகிடலாம்.

நம்மிடம் இருக்கும் நூல்கள் நமது தேடலின் பாதையில் வழிகாட்டும் விளக்காக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டிய நிபுணத்துவத்தை குருமுகமாக மட்டுமே அறியமுடியும்.


மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.



* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ்தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டேஇருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்துசெயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுநிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதைஇலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

பித்தத்திலிருந்து விடுபட!

piththam
பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.
உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.
தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் – தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-
  1. பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது. அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி’ என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.
  1. ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.
  1. ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.
  1. ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.
  1. ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.
காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு:-
உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், , கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள்,
வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல் , உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல்,
தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல்,
கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

திங்கள், 5 அக்டோபர், 2015

நமக்கு நாமே எதிரி



மூளைக்குள்ளே ஓர் உலகம் 
உடலுக்குள்ளே ஓர் ஆலை
தோல் போர்த்திய தேகத்துள்ளே
தொடர்ந்து ஓடும் குருதியோட்டம் 
உருவம் முழுதும் செல்கள் தொகுப்பு
உணர்ந்து பார்த்தால் உருவம் போலி
அழகாய்த் தோன்றும் உருவம் பொய்
அற்புத உடலின் உயிரோட்டம் மெய்
உடலே உயிரை நிதமும் காக்கும் - இதைப்
புரியா துடலை மனிதன் 
உருக்குலைத்து சீரழிப்பான் உண்மை


கருவினுள் உருவாகும் குழந்தை தேடும் உணவை கருத்துடன் தாயும் பகிர்ந்தளிப்பாள். எம்மைக் காக்கவே உடலும் தன்னைத் தயார்படுத்தும். உறுப்புக்களும் தேவைக்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டிருக்கும். செல்களினாலான உறுப்புக்களும் வௌ;வேறு விதமாகப் படைக்கப்பட்டிருக்கும். 

             சுருங்கிவிரியும் பகுதி மென்மையான செல்களாலும் இதயம் போன்ற பகுதிகள் கடுமையான செல்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. உடல் முழுவதும் தன் ஆட்சியை மேற்கொள்ளும் செல்கள். கண்ணுக்குத் தெரியாது எம்மில் முழுவதுமாகக் காணப்படுகின்றது.

 

உடலில் ஓர் இடத்தில் காயம் ஏற்பட்டால், இரத்தமாய்க் கொட்டிக் கொண்டேயிருக்கும் காயம் நாட்செல்ல குருதிச் சிறுதட்டுக்களால் சுகமாகி மீண்டும் அப்பகுதி வழமை நிலைக்குத் திரும்புகின்றதே. அடிபட்ட இடத்தில் இறந்த செல்களுக்குப் பதிலாக வேறு செல்கள் பிரிவடைந்து உடனடியாக காயம் முழுவதையும் மூடிக்கொள்ளும். மூடிக் கொண்டதும் உடல், செல்களுக்கு பிரியும் வேலையை நிறுத்தும்படி உத்தரவிட செல்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வேலையை நிறுத்தும் காயமும் மாறிவிடும். ஆட்டி வைப்பவனும் ஆடுபவனும் உடலுள் இருக்க  நாமோ வெளியே மருத்துவம் தேடி ஆடிக் கொண்டிருக்கின்றோம். 75 முதல் 100 டிரில்லியன் செல்கள் எமது உடலுள் ஆட்சி செய்கின்றன.    எமது செல்களில் கிட்டத்தட்ட 3000 விதமான புரோட்டீன்கள் உண்டு. இவை இரத்தத்தில் கலக்கக் கூடாது. அப்படிக் கலந்தால், இரத்தத்திலுள்ள புரோட்டீன்கள் சமீபாடடையாது. இந்நிலையில் செல்கள் தமக்குள் இருக்கும் புரொட்டின் உடலினுள் சேரவிடாது தற்கொலை செய்து கொள்ளும். 

ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா. ஆனால் இதுவே உண்மை. 



மூக்கினுள் நுழைய எத்தனிக்கும் கிருமிகளை மணிக்கு 100 மைல் வேகத்துடன் உடல் வெளியகற்றும். இதன் மூலம் 100,000 கிருமிகள் உடலிலிருந்து வெளியேறும். ஆனால் நாமோ வெட்கப்பட்டு மூக்கை மூடுகின்றோம். ஆனால் தும்மலைத் தடுத்தால் உயிர் போகும் ஆபத்தும் உண்டு. அதனாலேயே ஒருவர் தும்மினால், 100 என்று தமிழரும் Gesundheit   என்று ஜேர்மனியரும் God bless you என்று ஆங்கிலேயரும் சொல்கின்றார்கள். 

பழுதடைந்த உணவுகளை நாம் உட்கொண்டுவிட்டால் உடலானது வாந்தியாக வெளியகற்றிவிடும்.
தேவையான உணவுகளை நாம் உட்கொண்டால் அதை சத்தாக மாற்றி தேவையான உடலுறுப்புக்களுக்கு அனுப்பும். இக்கரிசனை எம்முடலுக்கிருக்க நாமோ எதிலும் அக்கறையின்றி  சாக்கடையினுள் அழுக்கைப் போடுவதுபோல் கண்டதையும் உண்டு உடலைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றோம்.

                     பேரிடிபோல் சத்தம் வரவே எம் கைகள் எமையறியாது காதுகளை ஏன் இறுகப் பொத்துகின்றன.








காதுவழி செல்லும் ஒலி செவிப்பறையைத்தாக்குவதுடன் அதனூடு சென்று உடலுக்கும் ஊறு விளைவிக்கின்றது. அத்துடன் இதயநரம்புகள் சார்ந்த இதயப்பாதிப்பும் ஏற்படுகின்றது. ஓரே ஒரு தடவை எட்டுமணி நேரத்துக்கு மிகையான சத்தம் கூடிய கூடிய சூழ்நிலையில் இருந்தால், இரத்தஅழுத்தமானது அழுத்தத்தில் ஐந்து முதல் பத்து புள்ளிகள் கணிசமான ஏற்றத்துடன் அயர்வு ஏற்படும். அத்துடன் நரம்புகள் இறுகவதால் இரத்த அழுத்தமும் கூடுகின்றது. இதனால், இதயக்கோளாறுகள் ஏறபடுகின்றன.  ஆனால், சிந்திக்கின்றோமா? களியாட்டங்கள், வைபவங்கள், கொண்டாட்டங்கள் அனைத்திலும் காதுகிழிய ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு இதுவே மகிழ்ச்சி என்று ஆரவாரம் செய்கின்றோம். 


                 எம்மைச் சுற்றி, எம்மை நோக்கி வரத் துடிக்கும் நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்துவிட்டால் உடலிள்ளே வாள், கத்தி ஏந்தி போருக்கு நிற்கும் இரத்தஅணுக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எம்மைக் காக்க எமக்குள்ளே ஓர் நண்பன் இரத்த அணுக்களினுள் வெண்குருதி சிறுதுணிக்கையே இத்தொழிலை எமக்கடிமையாய்ச் செய்கின்றது. முதலில் உள்வராமல் தடுக்கும். வந்துவிட்டால் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும். அது ஏந்தும் வாள், கத்தி யாதென்று தெரியுமா? முதலில் "பகோசைட்". இவை பக்டீரியா முதலில் இரத்தத்தால் பக்குவமாக்கும். பின் அழிக்கும். இரத்தத்தால் பக்குவமாக்கும் பொருள் யாதென்று தெரியுமா? அதுவே ஆப்ஸனின்.  பார்த்துப் பார்த்து பணி செய்ய பக்குவமாய் உடல் எமக்குள் தொழிலாளியாய் இருக்க நாமோ சூழலைக் கெடுக்கின்றோம். ஆலைகள் அமைக்கின்றோம். இயந்திர மயத்தில் இ.றப்பதற்கு வழி தேடுகின்றோம். 
               
             எங்கிருந்தோ ஆபத்து வரும்போது முதலில் நம் தலையைத் தானே இரு கரங்களினாலும் பொத்திப் பிடிக்கின்றோம். எம்மை அறியாமலே அதன் அவசியத்தை நாம் உணர்கின்றோமா இல்லையா? 

மூளையே நமது தலைமையகம். அதன் ஆட்சியில்தான் அனைத்தும் அடக்கம். மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இரத்தஓட்டம் தேவையான அளவு ஒட்சிசனை மூளைக்குக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மூளையும் தொழிற்படமுடியும். நாமென்ன செய்கின்றோம். இரத்தோட்டம் அதிகரிக்கச் செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்கின்றோமா? கணனி முன் இருந்து காலத்தைக் கழிக்கின்றோம். 
           
                         மூளையின் அவசியம் கருதி ஒரு பாதுகாப்புக் கவசத்தினுள்ளேயே அது அமைக்கப்பட்டிருக்கும். இக்கவசத்திற்கும்  மூளைக்குமிடையே ஒரு நீர்த் தன்மை (Cerebrospinal Fluid) பரவி இருக்கும். இது ஓடுகின்ற போதும் நடக்கின்ற போதும் அதிர்வு ஏற்படாமல் பாதுகாக்கும். மூளை தொழிற்படும் போது ஏற்படுகின்ற இரசாயணக்கழிவுகளை இந்த Cerebrospinal Fluid ஏ உறக்கத்தின்போது மூளைச் செல்களினூடாக ஊடுருவிப்போய் வெளியகற்றுகின்றது. பிற உறுப்புக்களுக்காகத் தொழிற்படும் மூளை தனக்காக ஓய்வெடுத்து தன்னிலுள்ள நச்சுத் தன்மையை வெளியகற்றும் நேரம் உறக்கமல்லவா? ஆனால், நாம் என்ன செய்கின்றோம்.  இரவிரவாகக் கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்து chat  பண்ணுகின்றோம். Party கொண்டாட்டங்கள் தொலைக்காட்சி என்று உறங்கும் நேரத்தைத் தொலைக்கின்றோம். 

                             ஏதும் பறந்தாலோ, கையை யாரும் முன்னே அசைத்தாலோ, மனதைக் கெடுக்கும் காட்சி ஏதும் கண்டாலோ முதலில் மூடுவது எம் கண் இமைகளே. கண்ணையும் கருத்தையும் பாதுகாக்க கண்இமை கைகொடுக்க கண்ணீர் துணையாக, நாமென்னவோ பார்க்கக் கூடாதவற்றைப் பார்த்து கணனி ஒலியின் பாதிப்பை உணர்ந்தும் அதற்கேற்ப சொல்லப்பட்ட தூரத்தில் கணனியை வைத்து வாசிக்காது, கண் இமைத்து வாசிக்காது, கண்களை காயவைத்து கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றோம். 

             செய்வதெல்லாம் செய்து விட்டு நேர்த்திக்கடனென்றும் நேர்மையற்ற மருத்துவரென்று, போதாத காலமென்றும், பொல்லாத உலகென்றும் அடுத்தவரைக் குறைகூறி அழிவது நாமே. 
                
                  இப்போது சொல்லுங்கள் எமக்கு யார் எதிரி?

எச்சரிக்கை ரிப்போர்ட்.. – ஒய்ட்னர் தரும் போதை



அன்றாடம் அலுவலகங்களில்,அவ்வப்போது வீடுகளில் பயன்படும் பொருளை இளைஞர்கள், பள்ளிக்கூடச் சிறுவர்கள் போதைக்காக எடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.


இந்த பகீர் தகவலின் பின்னணியில் இருக்கும் அந்தப் பொருள்... ‘ஒயிட்னர்’. எழுத்துக்களில் தவறு இருந்தால், அவற்றை அழிக்கப் பயன்படுவதுதான் இந்த ‘ஒயிட்னர்.’...


‘‘பொதுவாக பதின்மூன்று வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் நண்பர்கள் மூலம் இதனைத் தெரிந்துகொள்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு போதை உணர்வு பற்றியெல்லாம் தெரியாது. மாறாக, மூக்கருகே வைத்து முகரும்போது,ஒருவித மயக்கம் வருவது போல் தோன்றும். அவ்வளவுதான்.

நகங்களில் போடும் ‘பாலிஷ்’ கெட்டியாக ஒட்டிக் கொண்டால், அதன்மீது ‘ஒயிட்னர்’ வைத்தால் போதும். ஒரு சில நொடிகளில் ‘பாலிஷ்’ காணாமல் போய், நகங்கள் பளப ளக்கும். இதற்கு ‘ஒயிட்னரி’ல் இருக்கும் ‘டொலீன்’ என்கிற ரசாயனம்தான் காரணம். அதோடு ‘டிரை குளோரோ எதிலீன், ‘புரோமோ புரோபேன்,’’ ‘மெதில் பென்ஸீன்’ என் கிற சேர்மங்களும் சேர்ந்துகொள்வதால், ‘ஒயிட்னர்’ கொடிய விஷமாக மாறுகிறது. மூக்கருகே கொண்டு செல்லும்போது மயக்கம், போதை வருவதற்கும் இதுதான் அடிப்படை. அந்த மயக்கம் சில மணிநேரம் வரை நீடிக்கும் ஆபத்து உண்டு!’’ என்று சொல்லும் அந்த சமூக ஆர்வலர், அதனால் பள்ளிச் சிறுவர்களை பெற்றோர் கண் காணிப்பது அவசியம்குறைந்த விலை,எளிதில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், பயன்படுத்துபவர்கள் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராது. அன்றாடம் வீட்டுப் பாடங்கள் எழுதும்போது தவறுகள் வந்தால் எளிதில் அழிப்பதற்குத் தேவை. அதனால் ‘ஒயிட்னரை’ தவிர்க்கவும் முடியாது.

‘‘சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் இளைஞர்களிடம் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருவது உண்மை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு முறை ‘ஒயிட்னரை’ முகரும் எண்ணம் வரும். தொடர்ந்தால் போச்சு. அடிமையாகிடுவாங்க. சிலர் பெட்ரோல், காபித்தூள், தேயிலை மாதிரி பொருட்களை முகர்வது உண்டு. அதனால் வரும் பாதிப்புகள் குறைவு. ஆனால் ‘ஒயிட்னர்’ அப்படி அல்ல. முகரும்போது நேராக மூளை செல்களைத்தாக்கும். அதனால் போதை ஏற்படும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலரும் என்னிடம் சிகிச்சைக்காக வருவது உண்டு!’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல மனநல மருத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார்.

சரி. ஒயிட்னர் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொது மருத்துவர் செல்வராஜனிடம் கேட்டோம்.

‘‘ஒயிட்னரில் ‘ஆல்கஹால்’ உண்டு. போதை ஏற்பட அதுதான் காரணம். மூச்சுத் திணறல் முதல் மூளை செயலிழப்பு வரை பாதிப்புகள் வரும் ஆபத்து உண்டு!’’ என்கிறார்.

சிறுவர்களிடம் ஒயிட்னர் பயன்படுத்தும் பழக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?என்பது குறித்து பிரபல குழந்தை மருத்துவர் பிரேம் சேகரிடம் கேட்டோம். ‘‘நீண்டநாட்கள் பயன்படுத்தினால் நரம்புமண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்!’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்!.

பாதிப்புகள் என்னென்ன?

நுரையீரல் அழற்சி, ஞாபகசக்தி குறையும்,, பேசுவதில் சிரமம்.முகர்ந்தால் ஆபத்து,ஒருமுறை ‘ஒயிட்னரை’ முகர்ந்தால் சுமார் நான்கு முதல் பத்து மணி நேரம் வரை போதை இருக்குமாம். பைக்குள் வைத்து எளிதில் மறைத்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம் -Thanks : Kumudham.

எனவே வீட்டில் இருக்கும் பெற்றோர் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்கானைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.கஷ்டப்பட்டு பிள்ளைபெறுவதைவிட இன்றுபிள்ளைகள் வளர்ப்பு மிகப்பெரிய சுமையாகத்தான் தோன்றும். ஆனால் இதைப் பார்த்தால் நம் குடும்பம வீனாகித்தான் போகும். எனவே பேறுகாலத்தில் பெரும் கஷ்டத்தை கொஞ்சம் நினைத்தால் இது ஒரு பெரிய விசயமில்லைங்க.

சர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி


போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.

சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம். பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.

சர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது. இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.

பழக்கவழக்கத்திற்கு அடிமையாதல்


போதை பொருளான ஹெராயின் எடுத்து கொள்ளப்பட்ட உடனேயே அது தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் துகள்கள் உட்கொண்ட பின் விரைவாக செயல்புரிந்து கிளர்ச்சி நிலையினை அடைய செய்கிறது. சர்க்கரை உட்கொள்ளும் போது அது மெதுவாகவே செயல்புரிகிறது. உடலில் கொழுப்பு சத்து தேவைப்படும் வரை கல்லீரலில் சர்க்கரை பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. மற்ற போதைபொருள் போன்றே இதுவும் நம்மை அந்த பழக்கத்திற்கு அடிமையாக செய்கிறது. சுமார் 95 சதவீத மக்கள் சர்க்கரை பயன்பாட்டில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் என திட்டமதிப்பீடு செய்துள்ளனர்.

உறுப்புகளின் பாதிப்பு

ஹெராயின் போதைபொருள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை விட மூளையையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பெரும்பாலானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்று மேலும் அதிகமாக அடிமையாகும் நிலையே காணப்படுகிறது. சர்க்கரை மெதுவாகவே தன் வேலையை செய்கிறது. ஆனால் அதன் பாதிப்பின் தன்மை மிக அதிகமாகவே காணப்படுகிறது. சற்று அதிகமாக எடுத்து கொண்டால் அதன் பாதிப்பு உடலில் பலமாகவே எதிரொலிக்கிறது. இத்தகைய தன்மையினால் ஹெராயினை காட்டிலும் அதிக தீமை வாய்ந்ததாகவே இது கருதப்படுகிறது.

மிக அதிக அளவாக 8 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து கொள்ளுதல் போதுமானது என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே காணப்படுகிறது. காலையில் குடிக்கும் காபி, மதியம் எடுத்து கொள்ளும் சாக்லேட் மற்றும் இரவில் ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம் என நம்மை அறியாமலேயே அளவுக்கதிகமான சர்க்கரையை மறைமுகமாக எடுத்து கொள்கிறோம்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிபொருள் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த சர்க்கரை பொருள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமில்லாத போது வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் அந்த இடங்கள் நிரப்பப்படும் போது அவை கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளில் சேர ஆரம்பிக்கின்றன. மேலும் அது இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
எனவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலின் பி.எச். சமன்பாட்டினை (அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாடு) வெகுவாக பாதிக்கிறது. மேலும் அமில நிலையை உடலில் அதிகரிக்கிறது.

குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் பைருவிக் அமிலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகும். இது நம் உடலின் அடிப்படை அமைப்பான செல் அமைப்பை பாதிக்கிறது. அளவுக்கதிகமான அமில தன்மை உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமில தன்மையை சமன் செய்ய உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம் என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, வலு குறைந்த பற்கள் மற்றும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரசிஸ் போன்ற வியாதிகள் ஏற்பட ஏதுவாகின்றன.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பாதங்களையும் கவனிங்க…



நாம் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவு, பாதங்களை பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உடல் எடை முழுவதையும் தாங்குபவை பாதங்கள். எனவே, பாதங்களின் கீழ்ப்பகுதியில், சிராய்ப்பு, வீக்கம், வெடிப்பு இருக்கிறதா என்று, அவ்வப்போது கவனிக்க வேண்டும். பாதங்களின் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தாலோ, கால் விரல்களுக்கு நடுவில் அல்லது கீழே வலி, அரிப்பு அல்லது தொற்று நோய் பாதிப்பு இருந்தாலோ மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காலை, மாலை இரு வேளையும், பாதங்களை டெட்டால்
கலந்த நீரில் சுத்தம் செய்து, மாய்சரைசர் லோஷன் பூசவும். நகங்களை ஒட்ட வெட்டாமல்,நேராக வெட்டி தேய்க்க வேண்டும். இதனால், நகக் கண்களில் தொற்று ஏற்படுவதும், ஓரங்களில் உள்ள தசைகள், உட்பக்கமாக வளர்ந்து வலியை உண்டாக்குவதும் தவிர்க்கப்படும்.
பெடிக்யுர்: மாதத்திற்கு ஒரு முறை, அழகு நிலையம் சென்று, பெடிக்யுர் செய்துகொள்ளுங்கள். ஆனால், பெடிக்யுரில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள் கொதி நீரில் போட்டு சுத்தம் செய்யப்பட்டதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரே இடத்தில் நின்றபடி, இரண்டு பாதங்களையும் மாறிமாறி, எதிர் எதிர் பக்கமாக ஐந்து முறை வீதம் சுழற்றவும். மேலும், மாடி படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதும் நல்லது. தினசரி பாதங்களை உப்பு கலந்த குளிர்ந்த நீர் மற்றும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மூழ்கும்படி வைத்து எடுங்கள். மேற்குறிப்பிட்டவைகளை முழுமையாக கடைபிடித்து வந்தால், பாதவலி, முதுகு வலி மற்றும் மூட்டு வலி நீங்கும்.
பொருத்தமான காலனியை தேர்ந்தெடுங்கள் தட்டையான பாதம், மூட்டுவலி, குதிகால் மற்றும் இடுப்பு வலிக்கு காரண மாகிறது. இத்தகைய பாதங்களைக் கொண்டோர், செருப்பு தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருப்பது அவசியம்.
சிலரின் பாதங்கள் அதிக வளர்ச்சியடைந்து அகலமாக இருக்கும். இவர்களுக்கு மூட்டு மற்றும் தசை நார்களில் வலி உண்டாகலாம். அதனால், அவர்கள் சற்றே தட்டையான, காற்றோட் டமுள்ள காலணிகளை உபயோகிப்பது நல்லது.
கால்கள் மீது அதிக எடை அழுந்துவதால், ஆணிக்கால் நோய் ஏற்படுகிறது. இது, கால்களை தரையில் அழுந்த வைத்து நடக்க முடியாத அளவுக்கு, வேதனையை ஏற்படுத்தும்.
தோல் தடிப்பு, காய்ப்பு, நீர் கொப்புளங்கள் போன்ற வியாதிகளும் பாதங்களை சீர்குலைத்து விடும். பாத எலும்புகள் பெரியதாக வளர்ந்து விட்டாலும், பாதங்களில் வலி ஏற்பட்டு, நடப்பது கஷ்டம். கூர்மையான, மெல்லிய, உயரமுடைய செருப்புகளை அணிவதால், இப்படி ஏற்படுகிறது. பாதத்தின் தோல் தடிமனாகி விட்டாலும், பாதங்களில் வலி ஏற்படும். அதிக உடல் எடை மற்றும் தேய்ந்து போன செருப்புகளை உபயோகிப்பதால், இப்பிரச்னை ஏற்படுகிறது. பூஞ்சை, தொற்று நோய், அரிப்பு, சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் குதிகாலில் வெடிப்பு ஆகியவை பாதங்களில் ஏற்படும் பொதுவான பிரச்னை. இவற்றிலிருந்து விடுபட கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும். ஒரு நாளில், இரண்டு முறை பாதங்களை சுடுநீரில் கழுவி, நன்றாக துடைக்கவும். காட்டன் காலுறைகளையே உபயோகிக்க வேண்டும். அவை, எளிதில் வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும். நீச்சல் குளத்துக்கு அருகில், வெறும் காலுடன் நடக்காதீர். ஏனெனில், மற்றவர்கள் காலில் இருந்து நோய் தொற்ற வாய்ப்புள்ளது. நீச்சலுக்குப் பின் சுத்தமான நீரில் அவசியம் குளிக்கவும்.
நடைபயிற்சி: தினமும் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதனால், பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், பாதங்களின் ரத்த ஓட்டம் சீரடைந்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் பயன்தரும் நோக்கோல்

nokol

வெள்ளை கலந்த பச்சை நிறத்தில் உருண்டையாக இருக்கும். . இதில் உயிர்சத்து, விட்டமின்கள் மற்றும் தாது உப்பு என்பன  அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நோக்கோலைப் பயன்படுத்தி  சூப் செய்யவும், மரக்கறி பிரியாணி செய்யவும் பெருமளவு  பயன்படுத்துவர். நோக்கோல் சற்று கடினமான காயாகும். எனவே நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். . நோக்கோலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். 

முற்றிய நோக்கோலை வாங்குவதை விட பிஞ்சு நோக்கோலை வாங்குவதே சிறந்தது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நோக்கோலைச் சாப்பிட்டு வரலாம்.    


இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. நோக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும். குழந்தை பெற்ற பெண்கள் இந்த பிஞ்சு நோக்கோலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை ஏற்படுத்தும், நரம்புகளை வலுப்படுத்தும், குடல் நாளங்களை உறுதிப்படுத்தும். எலும்புகளை உறுதியாக்கும். 

நோக்கோலில்உள்ள சத்துக்கள் :

100கி நோக்கோலில் 75% விட்டமின் சி உள்ளது. 6.2கி கார்போஹைட்ரேட் , 1.7கி புரதம் , 4.3கிநார்ச்சத்து ,2.6கிசர்க்கரை , 0.1கி கொழுப்பு  போன்ற  சத்துக்களும், விட்டமின் இ, விட்டமின் பி கோம்பளக்ஸ் போன்ற உயிர்ச்சத்துக்களும் கல்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற கனிம சத்துக்களும் உள்ளன.

திலகமிடுதலின் முக்கியத்துவம் என்ன?

poddu2

திலகமிடுதல் என்பது எமது கலாச்சாரத்துடன் கூடிய ஒரு அம்சமாகும். எனினும் இந்த திலமகிடுதலால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை அறியாமலும் நாம் கடமைக்காக திலகமிடும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அதன் முக்கியத்தும் உணர்ந்துதான் எமது கலாச்சார நிகழ்வுகளில் திலகமிட்டு விருந்தினர்களை வரவேற்பது முக்கியமாகின்றது.  சந்தனம், குங்குமம், விபூதி முதலியனவற்றை நெற்றியில், புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிவதனை திலகமிடுதல் என்கின்றோம்.  இப்பகுதி நினைவாற்றல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாக அமைவதால்  யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.

திலகத்தினை நெற்றியில் இடும்போது “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக. புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும். என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்” என்று பிரார்த்திக்கப்படுகிறது. நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது. நெற்றியும், புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.
poddu
நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிர வைத்து உடல் உபாதையில் இருந்து பாதுகாக்கிறது. நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலமாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலை தடுக்கிறது. உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது. சில பெண்கள் பிளாஸ்டிக்கினால் ஆன ஒட்டும் பொட்டுகளை பயன்படுத்துகிறார்கள். இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும் பீர்க்கங்காய்.

peer4
பீர்க்கங்காய், நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பீர்க்கங்காய் முற்ற முற்றத்தான் நல்லது. பீர்க்கங்காய் முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டொனிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. பீர்க்கங்காயில்; கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாப்பொருள், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி என அனைத்து வகையான விட்டமின்களும் தாதுப்புக்களும் போதிய அளவில் உள்ளன.
இதனால்தான் சத்துணவு நிரம்பிய காய்கறியாக விளங்குகிறது. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் உள்ளன. இவை இன்சுலின் அல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இந்த வேதிப் பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன.
peer
பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது.இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
peer3
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்­ணீர் விட்டுக் காய்ச்சி ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர் இரத்த விருத்தி ஏற்படும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

சிறுநீரக கல் பிரச்னையும் அதற்கான தீர்வும்

kidney

இன்று பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக சிறுநீரக கல் பிரச்னை மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கல்சியம், அக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறன. சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பின்னா் வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்தி விடுகின்றது.
சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள் முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, பின்னா் முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும்.   பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பரா தைரொயிட் சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம்.

சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்த நீரை அருந்தலாம். 
வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்தாக வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், . பரங்கிக்காய்  என்பன உள்ளன. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும். 
தவிர்க்க வேண்டியவை:
சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பொப்கோன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் கோப்பி, தேனீா், சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சோஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கொக்கோ, சொக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

எலும்புகளை காக்க 10 கட்டளைகள்

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே நிலையில் (Postures) அமரக் கூடாது. உட்காருவதோ, நிற்பதோ, எழுதுவதோ, படம் பார்ப்பதோ, ஓவியம் வரைவதோ எதுவாக இருந்தாலும், அரை மணி நேரத்துக்கு மேல் தொடரக் கூடாது. இடைவெளி விட்டு வேலைகள் செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கான முதல் கட்டளை. 
சோம்பலான வாழ்க்கைமுறை, எலும்பு நோய்களுக்கு முக்கியமான காரணம். நடைப்பயிற்சி, மெதுஓட்டம் போன்ற பயிற்சிகளின் மூலம் எதிர் மின்னோட்டம் (நெகட்டிவ் எலக்ட்ரிசிட்டி) உடல் முழுவதும் பாயும். இதனால், கால்சியம் மற்றும் தாதுக்கள் ஈர்க்கப்பட்டு, எலும்புகள் வலுவாகும். மூட்டு, தசை வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. சூரிய ஒளி மூலமாகவே வைட்டமின் டியைப் பெற முடியும்.  வைட்டமின் டி மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், அது முழுமையாகக் கிரகித்து உடலுக்குள் செல்ல, சூரிய ஒளி தேவைப்படுகிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளி அரை மணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில், சர்க்கரை நோய்க்கு முதல் இடம். சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.
எலும்பு தொடர்பான பிரச்னைக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை, அறிவுறுத்தும் காலம் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வலி குறைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தினால், மீண்டும் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.
மூட்டுகளை வலுவாக்கச் சிறந்த பயிற்சி நீச்சல்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது, நம் உடல் எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது. தண்ணீருக்குள் மூட்டுகளை நன்கு அசைக்கக்கூடிய இலகுத்தன்மை கிடைப்பதால், தசைகள் வலுவடைந்து, மூட்டுக்களின் வளைவுத்தன்மையும் அதிகரிக்கிறது.
எலும்பு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. விளையாட்டின்போது ஏற்படும் காயங்களை அலட்சியம் செய்யக் கூடாது. ‘சிறிய அடிதானே, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ போன்ற அலட்சியங்கள், அதிக அளவில் எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும்.
மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி, வீக்கம், முட்டியில் சத்தம் வருதல், காலை எழுந்ததும் கை, கால்களை அசைக்க முடியாமல் இருத்தல் போன்ற பிரச்னைகளை, ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் சரிசெய்யலாம். அறிகுறிகள் தீவிரமானால், சிகிச்சை தேவைப்படும் நாட்களும் அதிகமாகிவிடும்.
எலும்புகளின் உருவ அமைப்புக்குப் புரதம் தேவைப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளைத் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல, எலும்புகள் ஆரோக்கியமாக வைட்டமின் சி, டி, கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பால் பொருட்கள், கேழ்வரகு, மீன், ஆரஞ்சு, சோயா, அதிக அளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிப்பது, மூட்டுக்களைப் பாதுகாக்கும். அதிக எடையைத் தாங்க முடியாமல், மூட்டுக்கள் தேய்ந்துவிடும் என்பதால், எடை அதிகமாக இருப்பவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், மூட்டுவலி குறைவதை உணர முடியும்.

தசைநார் கிழிவு… தடுப்பது எளிது!

தசைநார் (லிகமென்ட்)
எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்புதான் ‘லிகமென்ட்’ எனப்படும் தசைநார். இது கொலாஜனால் ஆனது. நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது உடலில் உள்ள தசைகளுடன் இணைந்து, எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லை எனில், எலும்புகள் இணைந்து இருக்காது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வோர் எலும்புக்கும் ஏற்றவாறு தசைநார்கள் இருக்கின்றன. இடுப்புப் பகுதியில் இருக்கும் தசைநார் மிகவும் வலுவானது. கை விரல்களில் இருக்கும் தசைநார்  மென்மையானது. இடுப்பு, கழுத்து, மூட்டு, கணுக்கால் என ஒவ்வொரு பாகத்திலும்  ஒவ்வொரு வகையான தசைநார்கள் இருக்கின்றன.
தசைநார் கிழிவு
விளையாட்டு வீரர்கள், விபத்தில் சிக்குபவர்களுக்குத்தான் பெரும்பாலும் தசைநார்கள் கிழியும். சுளுக்கு ஏற்படும் சமயங்களில் தசைநார் கிழிந்துவிடும். நடக்கும்போது, ஓடும்போது, சைக்கிள் ஓட்டும்போது, உடற்பயிற்சி செய்யும்போது என எப்போது வேண்டுமானாலும் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழலாம். மூட்டுப்பகுதியில் விபத்து ஏற்பட்டால், தசைநார் கிழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தசைநார் கிழிவதால் மட்டும் அல்ல, தசைநார் கொஞ்சம் அதிகமாக விரிந்தாலும் வலி ஏற்படும்.
தசைநார் கிழிவைக் கண்டுபிடிப்பது எப்படி?
தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை, பாதிக்கபட்ட  இடத்தின் வெளிப்புறத்தில் சோதனை செய்தே கண்டுபிடித்துவிட முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தசைநார் பாதிப்பை அளவிடலாம். தசைநார் பாதிப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. கால் மூட்டுகளில், மூட்டுக்கு உள் பகுதியிலும் லிகமென்ட் இருக்கும். மூட்டுக்குள் லிகமென்ட் கிழிந்தால் மீண்டும் சரிசெய்வது சிரமமான காரியம். எனவே, மூட்டுகளில் வலி இருந்தால், உடனே அதனைக் கவனிப்பது நல்லது.
லிகமென்ட் பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு, மீண்டும் பாதிப்பு ஏற்படுமா?
லிகமென்ட் சிகிச்சை என்பது லிகமென்ட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதுதான். சிகிச்சையில் கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும், லிகமென்ட் பழைய நிலைக்குத் திரும்பாமல் வலி இருக்கத்தான் செய்யும். எந்தச் செயலை செய்வதால் வலி ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்கலாம். உதாரணமாக, கால்பந்து விளையாடும்போதோ, நடனம் ஆடிவிட்டு வந்த பிறகோ வலி வருகிறது எனில், அதைத் தவிர்ப்பது நலம்.
பாதுகாப்பு டிப்ஸ்
வார்ம்அப் செய்யாமல் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது. விளையாட்டு வீரர்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்த பின்னர்தான் விளையாட வேண்டும்.
உடல் பருமனாக இருப்பவர்கள் ஆர்வக்கோளாறில் ஜிம்மில் கடினமானப் பயிற்சியில் ஈடுபடக் கூடாது. ஆரம்பக்கட்ட பயிற்சிகள் செய்த பின், பயிற்சியாளர் அறிவுறுத்தினால் மட்டுமே கடினமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
வைட்டமின் டி  சத்து அவசியம். எனவே, தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், வார்ம்அப் பயிற்சிகள் செய்யாமல் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது.
செயற்கையான புரோட்டீன் பானங்களைச் சாப்பிடுவது நல்லது அல்ல. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அளவான புரதமும் உடற்பயிற்சியுமே தசைகளையும் தசைநார்களையும் வலுவாக்கும்.
தசைநார் கிழிவு நிலைகள்
கிரேடு 1
தசைநார்கள் விரிந்து இருக்கும். பாதிப்பு உள்ள பகுதியில் டேப்பிங்  போடப்படும். பிசியோ
தெரப்பி கொடுக்கப்படும்.

கிரேடு 2
தசைநார்கள் 50 சதவிகிதம் வரை கிழிந்திருக்கும். டேப்பிங், பிசியோதெரப்பி மூலமே குணப்படுத்த முடியும். பாதிப்பைப் பொறுத்து, மாவுக்கட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
கிரேடு 3
தசைநார்கள் முழுமையாகக் கிழிந்துவிடும். மாவுக்கட்டு சிகிச்சை மட்டுமே ஒரே வழி. அதன் பின் பிசியோதெரப்பி கொடுக்கப்படும்.