புதன், 31 ஆகஸ்ட், 2016

தினம் ஒரு செவ்வாழை

மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அடிக்கடி உட்கொள்ளும் ஒரு பழம், வாழைப்பழம். இரவு உணவு உண்ட பின்னால், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது பலர், கடைபிடித்து வரும் ஒன்று. ஆனால், சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்துக்கு பின்னால், பழம் சாப்பிடுவது தான், உண்மையான பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதில், செவ்வாழைப்பழம் பலரும் விரும்பும் ஒன்று. விலை, கொஞ்சம்
அதிகம் என்றாலும், இருக்கக் கூடிய சத்துகள் ஏராளம். வாழைப்பழங்களிலேயே, செவ்வாழையில், அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன. பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.
இது, உடலுக்குள் செல்லும் போது, வைட்டமின் ஏவாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில், பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில், கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது.


செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும். இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.


பல்வலி, பல் அசைவு போன்ற உபாதைகளையும், செவ்வாழைப்பழம் விரைவில் குணப்படுத்தும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால், தொடர்ந்து, 21 நாட்கள் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம். சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.


சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழை பழத்தை தொடர்ந்து, ஏழு நாட்கள் உட்கொண்டு வர, சரும நோய், விரைவில் குணமாகும். எப்போதும்
சோம்பலாய் இருப்பவர்களுக்கு, இப்பழம், சிறந்த அருமருந்து. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினம் ஒரு செவ்வாழையை எடுத்துக் கொள்வது நல்லது. அந்த நாளில், உற்சாகம் இருப்பதை, நீங்களே அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு, நெஞ்செரிச்சல், தீராத உபாதையை கொடுத்து விடும்.
இதை போக்க, செவ்வாழை நல்லது. இதில், இயற்கையாக அன்டாசிட் தன்மை கொண்டதால், இப்பிரச்னை நீங்கும். பழம் எனக்கு பிடிக்காது என்று இருந்தாலும் கூட, செவ்வாழையை உட்கொண்டு வந்தால், இருக்கும் உடல் உபாதைகள் கட்டுக்குள் வரும் என்பதில் ஐயமில்லை.

மணலிக் கீரை-மார்பு சளி நீங்கும்

ஒவ்வொரு கீரைக்கும், ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. ஆனால், அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. நமக்கு தெரிந்த, சில கீரை வகைகளை தான் தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம். இதில், மிகவும் சிறப்பு வாய்ந்தது மணலிக் கீரை. மணலிக்கீரை பூண்டு இனத்தை சேர்ந்தது. இது, தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை. பஞ்சாப், சிந்து சமவெளி போன்ற இடங்களிலும், வளரக்கூடியவை. சமையலுக்கு பயன்படுத்தும்
கீரைகளில் ஒன்று. இதை மணல் கீரை, நாவமல்லிக் கீரை என்றும் அழைப்பர். இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும், மருத்துவக் குணம் கொண்டவை. முன்னோர்கள், மருத்துவத்துக்கு பயன்படுத்திய கீரைகளில், இதுவும் இடம் பெற்றுள்ளது.
வயிற்றுப் பூச்சி நீங்க: குழந்தைகளின் வயிற்றில் கிருமிகளின் தாக்கம் இருந்தால், மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவர். ஏனென்றால், உடலுள்ள சத்துக்களை, கிருமிகள் உறிஞ்சி விடுவதே இதற்கு காரணம். இதை அகற்ற, மணலிக் கீரையை சிறிது அரைத்து, நீரில் கலந்து அதிகாலையில், வெறும் வயிற்றில், மூன்று நாட்கள் குடித்து, மீண்டும் 4 நாட்கள் இடைவெளிக்கு பின், 3 நாட்கள் குடித்து வந்தால், தட்டைப் புழுக்கள் நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க: பொதுவாக, கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை, வாரம் இருமுறை பாசிப்பருப்புடன் கூட்டு செய்து, சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை நீங்கும்.
மார்புச்சளி நீங்கும்: மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக் கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இக்கீரையை குடிநீரில் கலந்து குடிக்கலாம். அல்லது கீரையை நன்கு அலசிய பின், சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிடலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் மார்புச்சளி நீங்கும்.
ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதி என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். பித்தம் அதிகரித்தாலும், மூளைக்கு தேவையான சத்துகள் குறைந்தாலும் ஞாபக மறதி ஏற்படும். இக்குறையை நீக்க, மணலிக் கீரையை, மசியல் செய்து உண்பது நல்லது.
ஈரல் பலம் பெற: ஈரல் பாதிக்கப்பட்டால், உடலின் உறுப்புகளும் பாதிக்கப்படும்; ரத்தம் சீர்கெடும். பார்வை குறையும். ஈரலைப் பலப்படுத்த, மணலிக்கீரை கஷாயம் செய்து தினமும் குடித்தால், ஈரல் பலம் பெறும்.
மார்பு பகுதியில், சளி கட்டிக்கொள்வதால், தொடர்ந்து, இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. மார்பு சளியைப் போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால், நீங்கும் அல்லது மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மார்பு சளியும் காணாமல் போகும்.

நமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை எவ்வித அறிகுறிகள் மூலம் அறியலாம்?

Image result for HIGH BP


பொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம். ரத்தக்கொதிப்பு கூடும்போது, உடலின் முக்கிய பாகங்களான மூளை, சிறுநீரகம், இருதயம், கண்களில் பெருமளவு பாதிக்கலாம். இதனால் இதற்குரிய அறிகுறிகளான பக்கவாதமோ, நெஞ்சுவலியோ, மூச்சுத் திணறலோ, கண்பார்வை மங்குவதோ, கால்வீக்கம் உட்பட பல வகைகளில் தென்படலாம். இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த வியாதியின் சிகிச்சையே இந்த உள்ளுறுப்பின் பாதிப்பை தவிர்ப்பதே. எனவே எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இதற்கு முதலில் வாழ்வியல் முறை மாற்றமே அத்தியாவசியமானது. அதாவது மனதை நிம்மதியாக வைத்திருப்பது, உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெயை குறைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி முக்கியமானது.
இவை எல்லாம் செய்தும் ரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் அவசியம் மருந்து தேவைப்படும். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. எனவே இந்த நோயை பொறுத்தவரை அறிகுறி வரும்வரை தாமதிக்காமல் ரெகுலராக, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது முக்கியம்.

Image result for HIGH BP

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கண்பார்வை இழக்க நேரிடுகிறது?

டயாபடிக் ரெடினோபதி என்ற கண் பார்வை கோளாறைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது பாத்திருப்பீர்கள் அல்லது சந்தித்திருப்பீர்கள். கண்களில் திசுக்கள் வளர்ந்து அதனால் கண்பார்வை இழக்கவும் நேரிடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களில் ஒரு சிறிய புரோட்டின் உருவாகி கண்களில் இருக்கும் இரத்தக் குழாயை பாதிக்கச் செய்கிறது. விளைவு கண்பார்வை பறிபோதல்.
உலகளவில் சர்க்கரைவியாதியால் கண்பார்வையற்றவர்கள் 1 சதவீதம் உள்ளார்கள். அதுவும் 40 வயதிலுள்ளவர்களுக்கும் இந்த ரெட்டினோபதியும், கூடவே குளுகோஸ் அளவு ஏற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று அமெரிக்காவிலுள்ள இண்டியான ஆப்தோமெட்ரி பக்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் தாமஸ் கூறியுள்ளார்.
கண்களிலுள்ள சிறிய நாளங்கள் ரெட்டினாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்புகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நாளங்கள் பாதிப்படைந்து, ஆக்ஸிஜனை கசிகின்றன.
இதனால் ரெட்டினாவை சுற்றியுள்ள திரவபகுதிகள் வீக்கமடைந்து பார்வை திறனை குறைக்கின்றன. இதனால்தான் டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறி இருப்பவர்களுக்கு சரியாக படிக்க முடிவதில்லை.
பொதுவாக நாளங்கள் பாதிப்படைந்தால், ஆக்ஸிஜன் போதிய அளவு ரெட்டினாவிற்கு அனுப்பப்படுவதில்லை. ரத்த ஓட்டம் குறைவதால், உடனே VEGF என்ற புரோட்டின்உற்பத்தி ஆகிறது.
இது கண்களிலுள்ள நாளங்களை ரிப்பேர் செய்து, பாதிப்பை சீர் செய்பவை. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சீர் செய்வதற்கு பதிலாக அந்த புரொட்டின் திசு அங்கேயே தங்கி, வளர்கிறது. இதுவே கண்பார்வையை குறைக்கிறது.’
ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு , கண்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், VEGF என்ற திசு உற்பத்தி அதிகமாகி, நாளங்களில் வளர்கிறது. இதான் கண்பார்வைத் திறன் இழக்க நேரிடுகிறது.

தாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்

Image result for வலி
சிலருக்கு தாங்க முடியாத தலைவலி சிறு வயதிலிருந்தே இருக்கும். சிலர் கால் வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி என எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள்.ஆனாலும் இவை வாழ் நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இது போன்ற நாள்பட்ட வலிகளுக்கு என்னதான் காரணம்? மரபணு.
நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கோ இந்த மாதிரியான வலி இருந்தால்,அது அடுத்த சந்ததியினருக்கும் தொடரும் என ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இந்த மாதிரியான நாள்பட்ட வலிகளை ஏற்படுத்தும் மரபணு, பெற்றோரிடமிருந்து அடுத்த சந்ததியினருக்கு கடத்திச் செல்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இரு பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. வலிகள் எதனால் ஏற்படுகிறது. நாள்பட்ட வலிகளுக்கு காரணமென்ன என ஆய்வு செய்தத்தில் இது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலுல்ள வாண்டர் பில்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அமெண்டா ஸ்டோன் என்ற ஆராய்ச்சியாளர் மற்றும் ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னா வில்சன் ஆகிய இருவரும் இந்த ஆய்வை நடத்தினர்.
அப்பாவோ அல்லது அம்மாவோ நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது கரு உற்பத்தியாகும்போது, அதனையும் சேர்த்து பாதிப்பதால் இந்த மாதிரியான வலிகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
போதிய உடற்பயிற்சிகள் இல்லாதிருப்பது மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் தங்களின் வலிகளை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இந்த மாதிரியான வலிகளைக் கொண்ட பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான செயலமைப்பு மரபணுவில் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.