வெள்ளி, 14 மார்ச், 2014

இரத்தம்

இரத்தம் உறைந்து கட்டியாவது
உடலில் காயம் ஏற்பட்டால் அதிக அளவு இரத்தம் வெளியேறிச் சேதமாகாமல் தடுக்கும் பொருட்டு இயற்கையாகவே அமைந்த ஒரு நுட்பம்தான் இரத்தம் உறைந்து கட்டியாதல். உடல் தசையில் எப்போது காயம் ஏற்பட்டாலும் இது நிகழ்கிறது. இரத்தத்தில் மூன்று செல்கள் அதாவது உயிரணுக்கள் உள்ளன. அவை இரத்தச் சிகப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், தட்டையங்கள் (Platelets) என்பனவாகும்

உடலில் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைந்து கட்டியாவதற்கு உதவுவது தட்டையங்களே. காயம் ஏற்பட்ட இரத்த நாளத்தின் அருகில் தட்டையங்கள் குவிந்து, இரத்தச் சிகப்பணுக்கள் வெளியேறாமல் தடுக்கின்றன. காயம்பட்ட நாளத்தின் அருகே குவியும் இத்தட்டையங்கள் ஒரு அடைப்பானைப் போலச் செயல்படுவதோடு, ஒரு வகை வேதிப் பொருளையும் வெளியேற்றித் திரவநிலையிலுள்ள இரத்தப் புரோட்டீனை, கரையாத திட நிலைப் புரோட்டீனாக மாற்றுகின்றன. இப்புரோட்டீன், கட்டி நிலையில் ஒரு வலைபோல அமைந்து தட்டையங்களையும், பிற இரத்த அணுக்களையும் வெளியேறாமல் தடுத்துவிடுகிறது.

இரத்தம் சேமிக்கப்படுவது

இரத்தம் உடலுக்கு வெளியே வந்தவுடன் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் உறைந்துபோய்விடும். பிளாஸ்மா புரோட்டீன்களுள் ஒன்றான ஃபைப்ரினோஜென் என்பதை கால்சியம் அயனிகளின் உதவியுடன் கரையாத ஃபைப்ரினாக மாற்றுவதே இரத்தம் உறைதல் ஆகும். எனவே இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு இரத்தத்திலுள்ள கால்சியம் அயனிகளை நீக்குவது போதுமானதாகும். அதாவது, இரத்தத்தை ஒருவர் உடலில் இருந்து மற்றொருவர் உடலுக்கு மாற்றும் பொருட்டுச் சேமிப்பதற்கு, இரத்தத்தில் உள்ள கால்சியத்தை நீக்க வேண்டும். இதற்கு சோடியம் சிட்ரேட் சேர்க்கப்பட்டு இரத்தம், கரையும் திரவக் கூட்டுப்பொருளாக மாற்றப்படுகிறது. இரத்த வங்கிகளில் ஒரு அலகு (450மி.லி.) இரத்தம் கிருமிநாசம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலனில் பாதுகாப்புக் கரைசலுடன் சேர்த்துச் சேமிக்கப்படும்; பாதுகாப்புக் கரைசல் என்பது தூய வடிநீர், சோடியம் சிட்ரேட், சிட்ரிக் அமிலம், சோடியம் பைபாஸ்ஃபேட், சேமிப்பின்போது இரத்த அணுக்களுக்கு ஊட்டம் தரும் சக்கரைப் பொருளான டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்ததாகும். இரத்தத்தை 50 செ.கி. வெப்பநிலை அளவில் வைத்திருந்தால் 35 நாட்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

                               

வியாழன், 13 மார்ச், 2014

வான்வெளியில் கருங்குழி

கருங்குழி என்பது விந்தையான ஆனால் எளிதில் விளங்கிக்கொள்ள இயலாத ஒரு வானியற் பொருளாகும். இதிலிருந்து ஒளி ஏதும் தெரிவதில்லை; அருகில் வரும் எந்தப் பொருளையும் ஆற்றலையும் இது உறிஞ்சிக் கொள்கிறது; எனவே இது கருங்குழி எனப் பெயர் பெற்றுள்ளது. மிக பெரியதொரு விண்மீன் அழிந்துபட்டதால் இஃது உண்டாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எல்லா விண்மீன்களுக்கும் வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது உள்ளது – அவை பிறக்கின்றன, வளர்கின்றன, முதுமை அடைகின்றன இறுதியில் மடிந்தும் போகின்றன. அவை மடிவது துவக்கத்தில் அவற்றின் நிறையைப் (mass) பொறுத்தது. விண்மீன் மிகப் பெரிய நிறையுடன் இருக்குமானால் – சூரியனைப் போல் 30 மடங்குக்கு மேற்பட்ட நிறை கொண்டதாக இருக்குமானால், விண்மீன் மடிவது மிகப் பேரிடியுடனும் பேரோளியுடனும் அமையும்; இது சூபர்நோவா (Supernova) எனப்படுகிறது. இந்தப் பேரிடிக்குப் பின்னர், அவ்விண்மீன் சின்னஞ்சிறியதோர் பொருளாக கருங்குழியாக அமைகிறது. கருங்குழியின் ஈர்ப்புப் புலம் (gravitational field) மிக வலிமையுள்ளதாகும்; ஒளியைக்கூட வெளியேற அனுமதிக்காது. எனவே கருங்குழியைக் காண முடிவதில்லை. இருப்பினும் அருகிலுள்ள விண்மீன்களின் மேல் அதன் ஈர்ப்பு விளைவு மற்றும் பிற விளைவுகள் வாயிலாகக், கருங்குழியின் இருப்பிடத்தை வானியல் வல்லுநர்கள் கண்டறிந்து விடுவர்.

மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:-

மனித மூளையும் அதன் செயல்திறனும்
1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.
4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.
5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.
6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.
7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.
9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.
10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.
11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்
13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.
14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.
மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.