வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பிறவியில் போதைக்கு அடிமையாகி பிறக்கும் குழந்தைகள் அதிர்ச்சி தகவல...!!!!!!!!!!


இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளன. கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்குகின்றன.

ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே இந்த தாக்கம் காணப்படுவதாகவும், கருவுற்ற நிலையில் இந்த குழந்தைகளின் தாய்கள் ஹெராயின், கொக்கைய்ன் போன்ற கொடிய போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததால், எந்தப் பாவமும் அறியாத அப்பாவி குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த போதைப் பழக்கம் பரவி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பெண்களின் கொடிய போதைப் பழக்கம் அவர்களை மட்டுமின்றி, அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாழ்படுத்தி விடுவதாக ஆய்வுக் குறிப்புகள் கவலை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.