வியாழன், 13 மார்ச், 2014

வான்வெளியில் கருங்குழி

கருங்குழி என்பது விந்தையான ஆனால் எளிதில் விளங்கிக்கொள்ள இயலாத ஒரு வானியற் பொருளாகும். இதிலிருந்து ஒளி ஏதும் தெரிவதில்லை; அருகில் வரும் எந்தப் பொருளையும் ஆற்றலையும் இது உறிஞ்சிக் கொள்கிறது; எனவே இது கருங்குழி எனப் பெயர் பெற்றுள்ளது. மிக பெரியதொரு விண்மீன் அழிந்துபட்டதால் இஃது உண்டாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எல்லா விண்மீன்களுக்கும் வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது உள்ளது – அவை பிறக்கின்றன, வளர்கின்றன, முதுமை அடைகின்றன இறுதியில் மடிந்தும் போகின்றன. அவை மடிவது துவக்கத்தில் அவற்றின் நிறையைப் (mass) பொறுத்தது. விண்மீன் மிகப் பெரிய நிறையுடன் இருக்குமானால் – சூரியனைப் போல் 30 மடங்குக்கு மேற்பட்ட நிறை கொண்டதாக இருக்குமானால், விண்மீன் மடிவது மிகப் பேரிடியுடனும் பேரோளியுடனும் அமையும்; இது சூபர்நோவா (Supernova) எனப்படுகிறது. இந்தப் பேரிடிக்குப் பின்னர், அவ்விண்மீன் சின்னஞ்சிறியதோர் பொருளாக கருங்குழியாக அமைகிறது. கருங்குழியின் ஈர்ப்புப் புலம் (gravitational field) மிக வலிமையுள்ளதாகும்; ஒளியைக்கூட வெளியேற அனுமதிக்காது. எனவே கருங்குழியைக் காண முடிவதில்லை. இருப்பினும் அருகிலுள்ள விண்மீன்களின் மேல் அதன் ஈர்ப்பு விளைவு மற்றும் பிற விளைவுகள் வாயிலாகக், கருங்குழியின் இருப்பிடத்தை வானியல் வல்லுநர்கள் கண்டறிந்து விடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.