திங்கள், 21 ஏப்ரல், 2014

நம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்



நம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் 
நமது உடலை பஞ்ச பூதங்களே இயக்குகிறது என்று நாம் அனைவரும் அறிவோம். ஆறாவதாக ஒன்று இருப்பதை பற்றி வெகு சிலரே அறிவர்.

மண், காற்று, ஆகாயம், நெருப்பு, நீர் ( ஐந்து )
விண் காந்த துகள்கள் - ஆறு. தாவரங்கள் மட்டுமே இந்த விண் காந்த துகள்களை  உட்கொண்டு, அதன் மூலம் நம்மை வாழ வைக்கிறது. 
 நம் பழக்க வழக்கத்தினாலும், உணவு முறையாலும் இந்த  ஐந்து பூதங்களை சீரழித்து [ சீ- என்றால் உயிர், உயிரை அழித்துக் கொள்கிறோம்]

அதிகம் உண்பது, முறையற்ற உண்பது, முறையற்ற பழக்கங்கள். இதனால் பஞ்ச பூதங்கள் கழிவுகளாக வெளியேறிவிடுகிறது. இதன் மூலமும் ஒருவர் நோய் வாய்படுவர்.

காற்று சக்தி  - வேர்வையாக 
மண் சக்தி  - மலமாக 
நீர் சக்தி - சிறு நீராக 
ஆகாய சக்தி  -  கண்களில் பீளையாக
அக்னி சக்தி  - கபமாக - சளியாக 
விண் அணுக்கள் - வாயுவாக  வெளியேறுகிறது.  
              இறைவன் நிர்மலமானவன். மலம் அற்றவன். தாவரங்களும் மலமற்ற ஒரு அறிய உயிரினமே. தாவரத்தை மட்டுமே உண்பவன் எளிதில் இறைவனாகலாம்.
"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா 
 உயிரும் கைதூக்கி தொழும். - திருவள்ளுவர்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.