வியாழன், 24 ஏப்ரல், 2014

(Health Tips)

மூலிகை மருத்துவம்

தேவையான எளிய  (Health Tips)

இன்று நான் உடல் நலம் சரியில்லாத எனது நெருங்கிய  நண்பரை நலம் விசாரிக்க சென்றேன்.அப்போது அவர் மருத்துவரை அனுகியதாகவும் அவர் சில மாத்திரைகளை கொடுத்ததாகவும்,ஆனால் அதில் 3 நாட்களாகியும் குணமடையவில்லை என்றும் தெரிவித்து கொண்டிருந்த போது அவருடைய 86 வயதாகிய பாட்டிஅவர்கள் காலத்து மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதை குறிப்பெடுத்து உங்களுக்கு சுருக்கமாக அளிக்கின்றேன்.இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள மருத்துவம் ஆகும்.

(முக்கிய  குறிப்பு :- இதுவரை பாட்டியம்மா ஆங்கில மருந்தினை உண்டதில்லையாம் எந்த உடல்நலக்  குறைவு என்றாலும் இயற்கை மருத்துவம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அவர் உடல் சோர்வின்றி நல்ல திடகாத்திரமாகவே உள்ளார்.நண்பரே உடனே அவர்களுக்கு திஷ்டி  சுத்தவும்)

01.தலைவலி போக்க :-

அனைவருக்கும் தலைவலியானது அடிக்கடி ஏற்படும் ஒரு உபாதையாகும் இதனை தீர்க்க ஆங்கில மருத்துவத்தை நாடுவதைவிட பக்க விளைவில்லாத   மூலிகை மருந்தினை நாடலாம்.


நொச்சி இலை
 நொச்சி இலையினை  நசுக்கி,சாறாக்கி நெற்றியில் தடவினால் நொடியில்  தலைவலி குறைவதை உணரலாம் .சற்று நேரத்தில் முழுவதுமாக    தலைவலியானது குணமடையும்.

02.அடிக்கடி ஏற்பபடும்  தும்மல் :-

சிலருக்கு அடிக்கடி தும்பலினால் அதிகம் அவதிப்படுவர் அதனை எவ்வாறு தீர்ப்பது என பார்க்கலாம்.


இஞ்சி தேநீர்( Tea -டீ )
அவர்கள்  தினமும்  காலை மற்றும் மாலை இரு வேலை வெறும் வயிற்றில்இஞ்சி தேநீரினை(Tea )குடித்து வந்தால்.இவ்வாறு அடிக்கடி ஏற்ப்படும் தும்பல் தீரும்.


03.நீர்க்கோர்வை :-

சிலருக்கு ஏற்படும் இந்த நீர்க்கோர்வையினை  சரிசெய்ய சாம்பிராணி புகை போடும் போது அதனுடன் தேங்காய் மட்டை நார், மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து அதிலிருந்து வரும் புகையை இழுக்க நீர்க்கோர்வை சரியாகும்.


மஞ்சள் தூள்
04 . படை :-

படை பலவகையில் உண்டாவது வியர்வை, தூசு, உடலில் குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் சில ஒவ்வாமை மூலம் ஏற்படுகிறது.


பப்பாளி மரம்
 இவற்றை குணப்படுத்த பப்பாளி இலைகளை அரைத்து படையின் மேல் தடவி ,15 நிமிடங்கள் கழித்து அரப்புத்தூள் போட்டு குளிக்கவேண்டும். தினசரி சுண்டை வத்தல் 10 எண்ணம் வறுத்து சாப்பிடவும்.நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் படை மறையும்.

05 . நோய் எதிர்ப்பு சக்தி பெருக:-

உடலில் நோய்கள் அண்டாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி கொள்ளவேண்டும்.அதனை பெருக்கிக்கொள்ள பின்வருமாறு செய்யலாம்.


முருங்கை இலை
முருங்கை கீரையினை சமைக்கும் போது அதில் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலைகளை நன்றாக சுத்தம் செய்து விட்டு முருங்கையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு  சக்தி உண்டாகும்.

06 . காய்ச்சல் :-

நமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சலினால்  அதிகம்  அவதிப்படுகிறோம்  அதனை போக்க  எளிய வழியினை காண்போம்.



துளசி இலை
 காய்ச்சலை போக்க வேப்பம் பட்டை,துளசி,மிளகு சேர்த்து கஷாயம்  வைத்துக்குடித்தால் காய்ச்சல் குணமடையும்.


துளசி மாடம்
குறிப்பு :- துளசி செடி வெளியிடும் வாயுவானது வான்மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் ஓட்டையினை அடைக்க கூடிய வல்லமை உள்ளதாம்.எனவே தான் அந்தகாலத்தில் நம் பெரியோர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் துளசி மாடம் இருக்க வேண்டும் என கூறினார்களோ! பெரிய அறிவியல் மேதைகள் தான் போலும். அவர்களுக்கு நன்றி.

07 . தொடர் இருமல் :-

இதனாலும் நாம் அதிகம் அவதிப்படுகிறோம் இந்த தொடர் இரும்பலை போக்க தினசரி மாலையில் கல்யாண முருங்கையிலை கொழுந்துகளை பறித்து அடை தட்டி சாப்பிட்டு வந்தால் இருமல் நின்றுவிடும்.


கல்யாண முருங்கை இலை

08.தொற்று நோய்களை தடுக்க :-

காலரா,டைபாய்டு,மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும் காலங்களில் கீழ் கூறியவாறு செய்து வந்தால் தொற்று நோய் வராமலும் மற்றும் பரவாமலும் தடுக்கலாம்.

ஒரு லிட்டர் குடிநீரில் 25 துளசியினை போட்டு நன்றாக கொதிக்க வைத்து சுத்தமான வடிக்கட்டியில் வடித்து கொண்டு குடித்து வந்தால் இது போன்ற தொற்று  நோய்கள் வராது.

09 . மார்பக வீக்கம் :-

சில இளைஞர்களுக்கு மார்பக வீக்கத்தினால் பெரிதும் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இது அவர்களுக்கான மருத்துவம்.


துவரை

துவரையை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள மார்பகத்தின் மீது தடவிவர மார்பக வீக்கம் நீங்கும்.

10.சளி தொல்லை நீங்க :- 

மார்பக சளி நீங்க தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையினை  சாப்பிட்டு   வந்தால்  தொடரும் சளி தொல்லை நீங்கும்.


கற்பூரவள்ளி இலை

11 . கண் பார்வை குறைபாடு நீங்க :- 

கருவேப்பிளையினை தினமும் சிறிதளவு பச்சையாக உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி கண் பார்வை அதிகரிக்கும்.


கருவேப்பில்லை இலை
மேற்சொன்ன அத்தனையும் நமக்கு எளிதாக கிடைக்ககூடியவை தான். அதனால் இதனை நாம் தக்க சமயத்தில் சேர்த்துக்கொண்டு பயன் பெறுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.