திங்கள், 7 ஏப்ரல், 2014

பெரிய வியாதிகளுக்கு மூலாதாரம் விஷமாக மாறும் வெள்ளைச்சீனி............


இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தன இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியிலிருந்து இரவு படுக்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடு பொருளாக நமக்குள் செல்கிறது. பலகாரகங்களில் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளி சாப்பிடுகிறோம். அந்த அளவு நமக்கு இனிபூட்டும் இந்த வெள்ளை சீனியை எப்படி தயார் செய்கிறார்கள் என்ற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் இனி அதை தொடக்கூட மாட்டீர்கள். இந்த அளவுக்கு பயமுறுத்தும் வெள்ளை சீனியை தயார் செய்ய என்னென்ன ரசாயன பொருட்கள் பயன்படுத்த படுகின்றன என பார்போம்.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிலீசிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயிட் செய்து பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். பிழிந்த சாறு 60 
செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரேட் பாஸ்போரிக் ஆசிட்
 லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. 
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்த படுகிறது.
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து 
சல்பர் டை ஆக்சைட் வாயுவை சேர்கிறார்கள்.
102 செண்டி கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை 

இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்கிறது.
அடுத்து பாலி எலெக்ட்ரோ லைட்டை சேர்த்து தெளிகலனில் மண், 

uசக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு
 கிடைகிறது.
சுடுகலனில் காஷ்டிக் சோடா , வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த 
ஜூஸ் தயாரிக்கப்படுகிறது.
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேடும் சேர்க்க

 படிக நிலையில் சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில்
 கலந்து விடுகிறது. இப்படி தயாரான சீனியில் எஞ்சி நிற்பது கார்பன் எனும்
 கரியே.
தயாரான நிலையிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை

 சாப்பிடக்கூடாது.
காரணம் அதில் உள்ள சல்பர் டை ஆக்சைட் எனும் ரசாயனம் மஞ்சள் நிறமாக

 மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறி விடுகிறது. உங்கள் சட்டை கலரில் உள்ள 
அழுக்கு எந்த சோப்பை கொண்டு தேய்த்தாலும் போக மாறுகிறதா? கவலை
 படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்து பாருங்கள். போயே போய் விடும்.
ஆக சட்டையின் அழுக்கை போக்க கூடிய ஒரு ரசாயன பொருளைத்தான்
 நாம் அள்ளி அள்ளி சாப்பிடுகிறோம். இந்த சீனியை சாப்பிட்டால் நம் குடல் 
என்ன பாடுபடும்? குடலில் மட்டும் அல்ல பல் வலி, பல் சொத்தை , குடல் புண் , 
சளி தொல்லை , உடல் பருமன் ,இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் , 
ரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான
 காரணியாக அமைகிறது.

ஆலைகளில் தயாரான வெள்ளைசீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெள்ளம்

 பனங்கட்டி, நாட்டுச்சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
 இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ இதய நோயோ சர்க்கரை வியாதியோ
 வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.