செவ்வாய், 24 ஜூன், 2014

Breast Cancer - மார்பகப் புற்றுநோய்கான காரணிகளும் சிகிச்சைகளும்





மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள்:
உடம்பை கட்டாக வைத்திருக்க பலவித கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் முக்கியமாக ஏற்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


மார்பகப் புற்றுநோய் இன்று எங்கள் நாட்டில் இளம் பெண் களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாக உருவெடுத்துள்ளது. மார்பகப் புற்றுநோய் சம்பந்தப்பட்ட பெண்களின் கவனயீனத்தினால் தான் அதிகமாக ஏற்படுகிறதென்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.


எனவே, மார்பகப் புற்று நோய் தொடர்பான அறிவூட்டுவதற்கான செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பிரதேச, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மார்பகப் புற்றுநோயை கண்டு பிடிப்பதற்கு நான்கு வழிகளில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.


புற்றுநோய் இருப்பதை தாமாகவே பரிசோதித்து கண்டு கொள்வது, ஆஸ்பத்திரிகளில் கிளினிக் சிகிச்சைக்கு செல்வதன் மூலம் அடை யாளம் கண்டு கொள்ளல், மெமோகிறாம் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கண்டு கொள்ள முடியும். இப்பரிசோதனைகள் அரசாங்க ஆஸ்பத்திரி களில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.


புற்றுநோய் ஏற்படுவதற்கு பிரதான காரணம் பிள்ளைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்களின் சுயநலம் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். தாயான பின்னரும் பெண்கள் தங்கள் உடலை கட்டாக வைத்திருந்து கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறுவதற்காக தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.


குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்கு தாய்ப் பாலை கொடுத்த பின்னர் சில தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பாலை பழக்கி புட்டிப்பாலை ஊட்டுவதனால் பெண்களின் மார்பகத்தில் இயற்கையாகவே ஊற்றெடுக்கும் தாய்ப்பால் வெளியேறுவதற்கு இடமின்றி மார்பகங்களிலேயே கண்டிப்போகின்றன.


இதுவும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். சில தாய்மார் தங்கள் மார்பகங்களில் தாய்ப்பால் ஊற்றெடுப்பதை தடுப்பதற்கு சில மருந்து மாத்திரைகளை எடுப்பதும் உண்டு. இதனாலும் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன. தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு சுமார் 3 முதல் 4 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு என்றுமே மார்பக புற்றுநோய் ஏற்படாதென்று புற்றுநோய் வைத்திய நிபுணர் கள் கூறுகிறார்கள்.


தெற்காசிய நாடுகளில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் இலங்கையே தாய்ப் பால் ஊட்டுவதில் முன்னிலையில் இருக்கின்றது என்ற உண்மை புலனாகி இருக்கின்றது. இந்தத் தகவலை யுனிசெப் அமைப்பின் விசேட போஷாக்கு நிபுணரான ஜூலியா க்ரெசவெக் தெரிவித் துள்ளார்.


எங்கள் நாட்டில் உள்ள கிராமிய மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமை நிலையில் உள்ள தாய்மார் இன்றும்கூட தங்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் பிள்ளைகளுக்கு 5 வயது வரை இயற்கை அன்னை மனித குலத்திற்கு அறிமுகம் செய்த பாலூட்டும் பழக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை


மார்பகப் புற்றுநோயும் பரிகாரமும்
மார்பகத்தின் அமைப்பு:

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத் தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.


இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குழ்களின் மேலேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்பகங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.